அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

அல்லாஹ்விடம் கூலியையும், மக்களிடம் புகழையும் எதிர்ப்பார்த்து நற்செயல் புரிந்தால்...

தினம் ஒரு ஹதீஸ்-521

أَخْبَرَنَا عِيسَى بْنُ هِلاَلٍ الْحِمْصِيُّ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حِمْيَرٍ، قَالَ حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ سَلاَّمٍ، عَنْ عِكْرِمَةَ بْنِ عَمَّارٍ، عَنْ شَدَّادٍ أَبِي عَمَّارٍ، عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ أَرَأَيْتَ رَجُلاً غَزَا يَلْتَمِسُ الأَجْرَ وَالذِّكْرَ مَا لَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ لاَ شَىْءَ لَهُ ‏"‏ ‏.‏ فَأَعَادَهَا ثَلاَثَ مَرَّاتٍ يَقُولُ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ لاَ شَىْءَ لَهُ ‏"‏ ‏.‏ ثُمَّ قَالَ ‏"‏ إِنَّ اللَّهَ لاَ يَقْبَلُ مِنَ الْعَمَلِ إِلاَّ مَا كَانَ لَهُ خَالِصًا وَابْتُغِيَ بِهِ وَجْهُهُ     
ﺳﻨﻦ ﺍﻟﻨﺴﺎﺋﻰ 3140

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (அல்லாஹ்விடம்) கூலியையும், (மக்களிடம்) புகழையும் எதிர்ப்பார்த்து அறப்போர் செய்பவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?; அவருக்கு என்ன கிடைக்கும்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு ஒன்றும் கிடைக்காது” என்று பதிலளித்தார்கள். அவர் இதையே திரும்ப திரும்ப மூன்று தடவை கேட்டார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு ஒன்றும் கிடைக்காது” என்று பதிலளித்துவிட்டு, “அல்லாஹ்விற்காக கலப்பற்ற முறையில் மனத்தூய்மையுடனும், அவனது திருப்தி மட்டும் எதிர்ப்பார்த்து செய்யப்படும் நல்லறத்தைத் தவிர வேறு எதனையும் அல்லாஹ் ஏற்க மாட்டான்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
நூல்: நஸாயீ 3140

It was narrated that Abu 'Umamah (ra) said: "A man came to the Prophet (sal) and said: 'What do you think of a man who fights seeking reward and fame - what will he have?' The Messenger of Allah (sal) said: 'He will not have anything.' He repeated it three times, and the Prophet (sal) said to him: 'He will not have anything.' Then he said: 'Allah does not accept any deed, except that which is purely for Him, and seeking His Face.'
[Nasa'i 3140]

தொடர்புடைய பிற பதிவுகள்: 
Blogger Widget

தொழுகைக்குப் பின்- 6

தினம் ஒரு ஹதீஸ்-511

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الصَّاغَانِيُّ، قَالَ حَدَّثَنَا أَبُو سَلَمَةَ الْخُزَاعِيُّ، مَنْصُورُ بْنُ سَلَمَةَ قَالَ حَدَّثَنَا خَلاَّدُ بْنُ سُلَيْمَانَ، - قَالَ أَبُو سَلَمَةَ وَكَانَ مِنَ الْخَائِفِينَ - عَنْ خَالِدِ بْنِ أَبِي عِمْرَانَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا جَلَسَ مَجْلِسًا أَوْ صَلَّى تَكَلَّمَ بِكَلِمَاتٍ فَسَأَلَتْهُ عَائِشَةُ عَنِ الْكَلِمَاتِ فَقَالَ ‏ "‏ إِنْ تَكَلَّمَ بِخَيْرٍ كَانَ طَابِعًا عَلَيْهِنَّ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَإِنْ تَكَلَّمَ بِغَيْرِ ذَلِكَ كَانَ كَفَّارَةً لَهُ سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ ‏"‏ 
ﺳﻨﻦ ﺍﻟﻨﺴﺎﺋﻰ 1344

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு சபையில் அமர்ந்து எழும்போதும், அல்லது தொழுகையை நிறைவு செய்த போதும் சில வார்த்தைகளை கூறுவார்கள். அதைப் பற்றி நான் அவர்களிடம் கேட்டபோது, “ஒருவர் சபையில் நல்வார்த்தைகள் பேசியிருந்து இந்த வார்த்தைகளைக் கூறினால் இவை அவைகளுக்கு முத்திரையாக மறுமைநாள் வரை (பாதுகாப்பாக) இருக்கும். அவர் நல்லது அல்லாத வேறு எதையும் பேசியிருந்தால் இந்த வார்த்தைகள் அவைகளுக்கு (பாவ) பரிகாரமாக இருக்கும் (அவ்வார்த்தைகளாவன) : “ சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக்க , அஸ்தக்ஃபிருக்க வஅதூபு இலைக். (யா அல்லாஹ்! நீ தூய்மையானவன். உன் புகழைக்க கொண்டு உன்னைப் புகழ்கின்றேன். உன்னிடத்தில் மன்னிப்பு தேடி உன்னிடமே திரும்புகின்றேன்)
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸாயீ 1344

It was narrated from Aishah (ra) that: When the Messenger of Allah (sal) sat in a gathering or prayed, he said some words, and I asked him about those words. He said: "If he has spoken some good words (and he says this statement of remembrance), it will be a seal for them to preserve them until the Day of Resurrection, and if he has said something other than that, it (these words) will be an expiation for him: 'Subhanak Allahumma wa bihamdika, astaghfiruka wa atubu ilayk (Glory and praise be to You, O Allah, I seek Your forgiveness and I repent to You.)'"
[Nasa'i 1344]

Blogger Widget

இறந்த பெற்றோருக்காக பிள்ளைகள் செய்யும் சிறந்த தர்மம்...

தினம் ஒரு ஹதீஸ்-497

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، قَالَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامٍ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي مَاتَتْ أَفَأَتَصَدَّقُ عَنْهَا قَالَ ‏"‏ نَعَمْ ‏"‏‏.‏ قُلْتُ فَأَىُّ الصَّدَقَةِ أَفْضَلُ قَالَ سَقْىُ الْمَاءِ     
ﺳﻨﻦ ﺍﻟﻨﺴﺎﺋﻰ 3664

"அல்லாஹ்வின் தூதரே! என் தாய் இறந்து விட்டார். அவர் சார்பில் நான் தர்மம் செய்யலாமா?  என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ஆம் என்றார்கள். எது சிறந்த தர்மம்? என்று கேட்டேன். குடிநீர் வழங்குதல் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். 
அறிவிப்பவர்: ஸஅது பின் உபாதா (ரலி)
நூல்: நஸாயீ 3664

It was narrated that Sa'd bin 'Ubadah (ra) said: "I said: 'O Messenger of Allah, my mother has died; shall I give in charity on her behalf?' He said: 'Yes.' I said: 'What kind of charity is best?' He said: 'Providing drinking water.'
[Nasa'i 3664]

தொடர்புடைய பிற பதிவுகள்:
Blogger Widget

இறந்த உயிரினத்தின் தோலைப் பயன்படுத்துதல்..


தினம் ஒரு ஹதீஸ்-479

خْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ وَاللَّفْظُ لَهُ عَنْ ابْنِ الْقَاسِمِ قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ مَيِّتَةٍ كَانَ أَعْطَاهَا مَوْلَاةً لِمَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: هَلَّا انْتَفَعْتُمْ بِجِلْدِهَا؟ قَالُوا يَا رَسُولَ اللَّهِ، إِنَّهَا مَيْتَةٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا حُرِّمَ أَكْلُهَا   ‏" 
ﺳﻨﻦ ﺍﻟﻨﺴﺎﺋﻰ 4235

நபி(ஸல்) அவர்களின் மனைவியான மைமூனா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமைப் பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட ஆடு இறந்துவிட்டது. நபி (ஸல்) அவர்கள் அந்த ஆட்டைக் கடந்து சென்றபோது, 'இதன் தோலை நீங்கள் (பதப்படுத்தி) பயன்படுத்திக் கொள்ளக் கூடாதா?' என்று கேட்டார்கள். அப்போது நபித்தோழர்கள் 'அல்லாஹ்வின் தூதரே! இது செத்த ஆடாயிற்றே!' என்றனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'அதை உண்பதுதான் தடை செய்யப்பட்டுள்ளது‘ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: நஸாயீ 4235

Narrated Ibn Abbas (ra): 
The Messenger of Allah  (sal) passed by a dead sheep that he had given to a freed slave woman of Maimunah (ra), the wife of the Prophet (sal). He said: Why dont you make use of its hide? They said: O Messenger of Allah, it is dead meat. The Messenger of Allah  (sal) said: It is only forbidden to eat it. 
[Nasa'i 4235]

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 2:173

தொடர்புடைய பிற பதிவுகள்: ஹராமானவைகள்..                          
                                  
Blogger Widget

ஹஜ்ருல் அஸ்வத் சொர்க்கத்துக் கல்...

தினம் ஒரு ஹதீஸ்-471

أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، قَالَ حَدَّثَنَا مُوسَى بْنُ دَاوُدَ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏الْحَجَرُ الأَسْوَدُ مِنَ الْجَنَّةِ    
ﺳﻨﻦ ﺍﻟﻨﺴﺎﺋﻰ 2902

ஹஜ்ருல் அஸ்வத் சொர்க்கத்துக் கல்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: நஸாயீ 2902

It was narrated from Ibn Abbas (ra) that the Prophet (sal) said: "Hajar al-Aswad is from Paradise".
Blogger Widget

தொழுகையின் இறுதி அமர்வில் கேட்கும் துஆ..

தினம் ஒரு ஹதீஸ்-468

தொழுகையின் இறுதி அமர்வில் அத்தஹியாத்ஸலவாத் ஓதிய பின்பாக நபிமொழிகளில் இடம்பெற்றுள்ள துஆக்களை ஓதிய பின்பாக இம்மை , மறுமைக்கு நல்லதைப் பயக்கும் நாம் விரும்பும் எதை வேண்டுமானாலும் அல்லாஹ்விடம் அவரவர் தாய்மொழியிலேயே கேட்கலாம். மேலும், குறிப்பாக அவ்வேளையில் துஆ கேட்பதை ஒவ்வொரு ஜுமுஆ தொழுகையிலும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், ஏனெனில் வெள்ளிக்கிழமையில் துஆ அங்கீகரிக்கப்படும் நேரம் ஒன்று உள்ளது. அது ஜுமுஆ தொழுகையின் அத்தஹியாத் அமர்வில் துஆ கேட்கும் நேரம் என்று நபிமொழிகளில் வந்துள்ளது.

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمُقْرِئُ، حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، حَدَّثَنِي أَبُو هَانِئٍ الْخَوْلاَنِيُّ، أَنَّ عَمْرَو بْنَ مَالِكٍ الْجَنْبِيَّ، أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ، يَقُولُ سَمِعَ النَّبِيُّ صلى الله عليه وسلم رَجُلاً يَدْعُو فِي صَلاَتِهِ فَلَمْ يُصَلِّ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ عَجِلَ هَذَا ‏"‏ ‏.‏ ثُمَّ دَعَاهُ فَقَالَ لَهُ أَوْ لِغَيْرِهِ ‏"‏ إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِتَحْمِيدِ اللَّهِ وَالثَّنَاءِ عَلَيْهِ ثُمَّ لِيُصَلِّ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ لِيَدْعُ بَعْدُ بِمَا شَاءَ   
‎‏ﺟﺎﻣﻊ ﺍﻟﺘﺮﻣﺬﻱ 3424
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَمَّارٍ الْمَوْصِلِيُّ، عَنِ الْمُعَافَى، عَنِ الأَوْزَاعِيِّ، ح وَأَنْبَأَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، عَنْ عِيسَى بْنِ يُونُسَ، - وَاللَّفْظُ لَهُ - عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ حَسَّانَ بْنِ عَطِيَّةَ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي عَائِشَةَ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِذَا تَشَهَّدَ أَحَدُكُمْ فَلْيَتَعَوَّذْ بِاللَّهِ مِنْ أَرْبَعٍ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَعَذَابِ الْقَبْرِ وَفِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ وَمِنْ شَرِّ الْمَسِيحِ الدَّجَّالِ ثُمَّ يَدْعُو لِنَفْسِهِ بِمَا بَدَا لَهُ    
‎1294 ﺳﻨﻦ ﺍﻟﻨﺴﺎﺋﻲ
ஒரு மனிதர் தனது தொழுகையில் அல்லாஹ்வைப் (புகழ்ந்து) கண்ணியப் படுத்தாமலும் நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத் சொல்லாமலும் பிரார்த்தனை செய்ததை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். இவர் அவசரப்பட்டு விட்டார் என்று கூறி அம்மனிதரை நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அவரிடம் அல்லது மற்றவரிடம் உங்களில் ஒருவர் தொழு(கையில் பிரார்த்தித்)தால் முதலில் மாண்பும் வலிமையும் மிக்க அல்லாஹ்வை அவர் புகழ்ந்து கண்ணியப் படுத்தட்டும். பிறகு (உங்கள்) நபியின் மீது ஸலாவத் சொல்லட்டும். இதற்குப் பிறகு அவர் விரும்பியதை வேண்டட்டும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஃபளாலா பின் உபைத் (ரலி)
நூல்: திர்மிதீ 3424
உங்களில் ஒருவர் (தொழுகையில்) அத்தஹிய்யாத் அமர்வில் இருக்கும் போது நரகத்தின் வேதனை, மண்ணறையின் வேதனை, வாழ்வின் சோதனை மற்றும் இறக்கும்போது ஏற்படும் சோதனை, மஸீஹுத் தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்தின் தீங்கு ஆகிய நான்கு விஷயங்களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும், பின்னர் அவர் விரும்புவதை தனக்காகப் பிரார்த்திக்கட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: நஸாயீ 1294
Narrated Fazhalah bin Ubaid (ra):
The Prophet (sal) heard a man supplicating in his prayer but he did not send Salawat upon the Prophet (sal), so the Prophet (sal) said: ‘This one has rushed.’ Then he called him and said to him, or to someone other than him: ‘When one of you performs prayer, then let him begin by expressing gratitude to Allah and praising Him. Then, let him send Salawat upon the Prophet, then let him supplicate after that, whatever he wishes.
[Tirmidhi 3424]


தொடர்புடைய பதிவுகள்:
அத்தஹிய்யாத் அமர்வில் ஓத வேண்டிய துஆ -3

துஆ ஏற்கப்படும் சிறந்த வேளை -5

மேலும், தொழுகை சம்பந்தமான எமது தளத்தின் அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கேயும், துஆ சம்பந்தமான எமது தளத்தின் அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கேயும் கிளிக் செய்யுங்கள்.

Blogger Widget

ஸூரத்துல் இஃக்லாஸின் சிறப்பு -2

தினம் ஒரு ஹதீஸ்-459

أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عُبَيْدِ بْنِ حُنَيْنٍ، مَوْلَى آلِ زَيْدِ بْنِ الْخَطَّابِ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ أَقْبَلْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَسَمِعَ رَجُلاً يَقْرَأُ ‏{‏ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ * اللَّهُ الصَّمَدُ * لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ * وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ ‏}‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ وَجَبَتْ ‏"‏ ‏.‏ فَسَأَلْتُهُ مَاذَا يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ الْجَنَّةُ   
983 ﺳﻨﻦ ﺍﻟﻨﺴﺎﺋﻲ

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (பயணத்தில்) இருந்தேன். அப்போது  குல்ஹுவல்லாஹு அஹத், அல்லாஹுஸ் ஸமத், லம் யலித் வலம் யூலத், வலம் யகுன் லஹு குஃபுவன் அஹத் (அல்லாஹ் ஒருவன் என  கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை) என்ற (112 ஆவது) அத்தியாயத்தை (திரும்பத் திரும்ப) ஒருவர் ஓதுவதை நபி(ஸல்) அவர்கள்  செவியுற்றதும்,  (அவருக்குக்) கடமையாகி விட்டது என்று கூறினார்கள். உடனே நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! என்ன கடமையாகி விட்டது? என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், சொர்க்கம் (கடமையாகி விட்டது) என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: நஸாயீ 983

Narrated Abu Hurairah (ra): 
'I came back (from a journey) with the Messenger of Allah (sal) and he heard a man reciting Qul Huwallahu Ahad, Allahus-Samad, Lam yalid wa lam yulad, Wa lam yakunllahu kufuwan ahad. ('Say: He is Allah, (the) One, the Self-Sufficient Master, He begets not, nor was He begotten. And there is none equal or comparable unto Him)' The Messenger of Allah (sal) said: 'It is guaranteed.' We asked him: 'What, O Messenger of Allah?' He said: 'Paradise.'"
[Nasa'i 983]

குர்ஆன் சம்பந்தமான தொடர்புடைய பிற பதிவுகள்:
சொர்க்கத்திற்குள் நுழைவிக்கும் அமல்கள் தொடர்பான பிற பதிவுகள்:
Blogger Widget

ஸலவாத் கூறுவதன் நன்மைகள்...

தினம் ஒரு ஹதீஸ்-454

أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ، قَالَ حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ صَلَّى عَلَىَّ صَلاَةً وَاحِدَةً صَلَّى اللَّهُ عَلَيْهِ عَشْرَ صَلَوَاتٍ وَحُطَّتْ عَنْهُ عَشْرُ خَطِيئَاتٍ وَرُفِعَتْ لَهُ عَشْرُ دَرَجَاتٍ ‏" 
ﺳﻨﻦ ﺍﻟﻨﺴﺎﺋﻰ 1281

யார் என் மீது ஒரு முறை ஸலவாத் சொல்கிறாரோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை அருள் புரிகிறான். அவருடைய பத்து தவறுகளை அழிக்கின்றான். பத்து உயர்வுகள் அவருக்கு அளிக்கப்படுகின்றன” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: நஸாயீ 1281

Narrated Anas bin Malik (ra): 
The Messenger of Allah (sal) said: He who recites Salawat upon me once, Allah will send His blessings ten times upon him, forgive ten of his sins and upgrade his status ten times".
[Nasa'i 1281]

அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்! ஸலாமும் கூறுங்கள்!. 
அல்குர்ஆன் 33:56
Blogger Widget

வித்ர் தொழுகைக்குப் பின்...


தினம் ஒரு ஹதீஸ்-448

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ إِشْكَابَ النَّسَائِيُّ، قَالَ أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُبَيْدَةَ، قَالَ حَدَّثَنَا أَبِي، عَنِ الأَعْمَشِ، عَنْ طَلْحَةَ، عَنْ ذَرٍّ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الْوِتْرِ بِـ سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى وَ قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَوَ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ فَإِذَا سَلَّمَ قَالَ سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ ثَلاَثَ مَرَّاتٍ
ﺳﻨﻦ ﺍﻟﻨﺴﺎﺋﻲ 1720

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மூன்று ரக்அத்கள்) வித்ர் தொழும் போது (முதல் ரக்அத்தில்) “ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா” (மிக உயர்ந்த உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக!) என்ற (87 வது) அத்தியாயத்தையும், (இரண்டாவது ரக்அத்தில்) “குல்யா அய்யுஹல் காஃபிரூன்” (கூறுவீராக: (ஏகஇறைவனை) மறுப்பவர்களே!) என்ற (109 வது) அத்தியாயத்தையும், (மூன்றாவது ரக்அத்தில்) “குல்ஹுவல்லாஹு அஹத்” (“அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக!) என்ற (112 வது) அத்தியாயத்தையும் ஓதுபவர்களாக இருந்தார்கள். ஸலாம் கொடுத்து முடித்ததும் “ஸுப்ஹானல் மலிகில் குத்தூஸ்” (பரிசுத்தமான அரசன் (அல்லாஹ்) தூய்மையானவன்) என்று மூன்று முறை கூறுவார்கள்.
அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி)
நூல்: நஸாயீ 1720

Narrated Ubayy bin Ka’b (ra):
The Messenger of Allah (sal) used to recite in Witr: “Sabbihisma rabbikal A’laa” (Glorify the Name of your Lord, the Most High) [chapter 87]; and “Qul yaa ayyuhal Kafiroon” (Say: O you disbelievers!) [chapter 109]; and “Qul huw-Allahu ahad” (Say: He is Allah, (the) One) [chapter 112]. And when he said the salam, he would say: “Subhanal Malikil Quddus” (Glory be to the Sovereign, the Most Holy) three times.
[Nasa'i 1720]


மேலும் தொடர்புடைய பிற பதிவுகள்: கடமையான தொழுகைக்குப் பின் ஓத வேண்டியவைகள்: 12345678
Blogger Widget

ஜனாஸாவைப் பின்தொடர்தலின் ஒழுங்கு…


தினம் ஒரு ஹதீஸ்-422

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமிற்கு செய்ய வேண்டிய கடமைகளில் ஜனாஸாவை பின்தொடர்வதும் ஒன்று (புகாரி 1240),ஜனாஸாவைத் தூக்கிச் செல்லும் போது நாம் வாகனத்திலும் பின்தொடரலாம், ஆனால் வாகனத்தில் செல்பவர்கள் ஜனாஸாவிற்கு முன்பாக செல்லக் கூடாது, பின்னால் தான் செல்ல வேண்டும், பின்தொடர்தலுக்காக நடந்து செல்பவர்கள் அவர்கள் விரும்பியவாறு ஜனாஸாவின் முன்பாகவோ, பின்வாகவோ நடந்து செல்லலாம், நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோர்கள் ஜனாஸாவிற்கு முன்பாக நடந்து சென்றிருக்கிறார்கள் (திர்மிதீ 929). மேலும் ஜனாஸாவானது தோளிலிருந்து இறக்கி தரையில் வைக்கப்படும் வரை உடன் சென்றவர்கள் அமரக் கூடாது, நின்றபடி தான் இருக்க வேண்டும்.
பின்தொடர்வதன் ஒழுங்கு -1பின்தொடர்வதன் ஒழுங்கு -2
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، قَالَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُبَيْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُ زِيَادَ بْنَ جُبَيْرٍ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَنَّهُ ذَكَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ الرَّاكِبُ خَلْفَ الْجَنَازَةِ وَالْمَاشِي حَيْثُ شَاءَ مِنْهَا وَالطِّفْلُ يُصَلَّى عَلَيْهِ
‎‏
ﺳﻨﻦ ﺍﻟﻨﺴﺎﺋﻰ 1932‎‏
حَدَّثَنَا مُسْلِمٌ ـ يَعْنِي ابْنَ إِبْرَاهِيمَ ـ حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ إِذَا رَأَيْتُمُ الْجَنَازَةَ فَقُومُوا، فَمَنْ تَبِعَهَا فَلاَ يَقْعُدْ حَتَّى تُوضَعَ
‎‏
ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 1310
வாகனத்தில் செல்பவர் ஜனாஸாவின் பின்னால் செல்ல வேண்டும்; நடந்து செல்பவர், அவர் விரும்பியவாறு செல்லலாம்; மேலும் சிறுவர்களுக்கும் (ஜனாஸா) தொழுகை நடத்தப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி)
நூல்: நஸாயீ 1932
ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்; அதைப் பின்தொடர்ந்து செல்பவர் (அது தரையில்) வைக்கப்படும் வரை உட்கார வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி 1310
It was narrated from Mughirah bin Shu’bah (ra) that The Messenger of Allah (sal) said: “The rider should move behind the Janazah and the pedestrian may walk wherever he wishes, and the (funeral) prayer should be offered for a child.
[Nasa'i 1932]
It was narrated from Abu Sa`id Al-Khudri (ra) that The Prophet (sal) said, “When you see a funeral procession, you should stand up, and whoever accompanies it should not sit till the coffin is put down.
[Bukhari 1310]
Blogger Widget

உருவப்படங்கள்…


தினம் ஒரு ஹதீஸ்-398

சிலர் தங்கள் வீடுகளில் சுவற்றில் முன்னோர்களின் போட்டோக்களைத் தொங்க விடுகின்றனர், இது போன்ற உருவப்படங்கள், உருவச்சிலைகளுக்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை, ஆனால் இவற்றில் சில விதிவிலக்குகளும் உண்டு, கால்மிதியடியில் உருவம், தலையணையில் உருவம் போன்ற மதிப்பில்லாத உருவங்களுக்கு அனுமதி உண்டு, குழந்தைகள் விளையாடும் உருவப் பொம்மைகள் வைத்துக் கொள்ளலாம், துணிகளில் சிறு அளவிலான உருவப்படங்களுக்கும் அனுமதி உண்டு, உயிற்றைகளின் உருவப்படங்களை தாராளமாக வைத்துக் கொள்ளலாம், அதில் பிற மதத்தினரால் புனிதமாகக் கருதப்படும் உயிற்றவைகளின் படங்கள், சிலைகளுக்கும் அனுமதி இல்லை..
حَدَّثَنَا مَسْعُودُ بْنُ جُوَيْرِيَةَ، قَالَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامٍ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ عَلِيٍّ، قَالَ صَنَعْتُ طَعَامًا فَدَعَوْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَجَاءَ فَدَخَلَ فَرَأَى سِتْرًا فِيهِ تَصَاوِيرُ فَخَرَجَ وَقَالَ إِنَّ الْمَلاَئِكَةَ لاَ تَدْخُلُ بَيْتًا فِيهِ تَصَاوِيرُ
ﺳﻨﻦ ﺍﻟﻨﺴﺎﺋﻰ 5284

நான் நபி (ஸல்) அவர்களுக்காக உணவு தயாரித்து, அவர்களை (விருந்திற்கு) அழைத்தேன். நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது திரைச்சீலையில் உருவம் இருப்பதைக் கண்டார்கள். உடனே அவர்கள் வெளியேறி விட்டார்கள். பிறகு, “எந்த வீட்டில் உருவங்கள் உள்ளதோ அந்த வீட்டில் (இறைவனின் அருளைக் கொண்டு வரும்) மலக்குகள் நுழைய மாட்டார்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: நஸாயீ 5284

It was narrated that ‘Ali (ra) said: “I made some food and invited the Prophet (sal) (to come and eat). He came and entered, then he saw a curtain on which there were images, so he went out and said: ‘The Angels do not enter a house in which there are images.
[Nasa'i 5284]
Blogger Widget