அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

ஷிர்க் வைக்காமல் இருப்பதோடு மார்க்கத்தின் பிற கட்டளைகளையும் பின்பற்றுதல் அவசியம்…


தினம் ஒரு ஹதீஸ்-234

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை. (திருக்குர்ஆன் 5:72) &அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும். (திருக்குர்ஆன் 6:88) & அல்லாஹ், அவனுக்கு இணை கற்பிக்கப்படுவதை மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான்.(திருக்குர்ஆன் 4:116)
அல்லாஹ்விற்கு இணை கற்பித்தால், செய்த நற்செயல்களுக்கு எதற்கும் கூலி கிடைக்காது. எனவே ஒருவர் சொர்க்கத்திற்குள் நுழைய வேண்டுமானால் முதல் & முக்கிய விஷயம், அவர் அல்லாஹ்விற்கு இணை கற்பிக்காத நிலையில் இறந்திருக்க வேண்டும், அதே நேரத்தில், அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காமல் இருந்தால் மட்டும் போதும், மற்ற விஷயங்களில் ஏனோ தானோவென்று இருக்கலாம் என்றும் எவரும் எண்ணிவிடக்கூடாது. மற்ற பாவங்களை அல்லாஹ் தான் நாடியோருக்குத் தான் மன்னிப்பான், அவன் யாருக்கு நாடுகிறான் என்பது நமக்குத் தெரியாது. அல்லாஹ்விற்கு இணை கற்பிக்காமல் இருப்பதோடு மார்க்கம் ஏவிய, தடுத்த விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும், (தாங்கள் அல்லாஹ்விற்கு இணை கற்பிக்காதவர்கள் என்று சிலர் கூறிக் கொண்டு புறம் பேசி, பிறர் மானம் விஷயத்தில் விளையாடுவதையும், அசிங்கமாகப் பேசுவதையும் வலைதளங்களில் பரவலாகக் காணக் கூடிய ஒன்றாக உள்ளது.) அல்லாஹ்விற்கு இணைவைக்காத நிலையில் மரணித்தால் நிரந்தர நரகம் தான் கிடையாது, மற்ற பாவங்களை அல்லாஹ் மன்னித்தால் நரகம் செல்லாமல் தப்பலாம், அவன் மன்னிக்காவிடில் நரகம் சென்று தான் சொர்க்கம் செல்ல முடியும், அதுவும் அல்லாஹ் எவ்வளவு காலம் நரகில் வேதனை தர நாடுவான் என்றும் தெரியாது, இவ்வுலக நெருப்பை விட நரக நெருப்பு 69 மடங்கு கொடியது, (புகாரி 3265) அத்தகைய நரக நெருப்பின் சிறு கங்கை உள்ளங்காலின் கீழ் வைத்தாலே அதன் தாக்கத்தால் மூளையே கொதிக்கும், (இது தான் நரக தண்டணையில் சிறியது) [முஸ்லிம் 363] அந்த நரக நெருப்பு உடலில் பட்டால் உடல் கரிக்கட்டை ஆகி விடும், வேதனையை உணர புது தோல்கள் மாற்றப்பட்டு வேதனை தொடர்ந்து கொண்டே இருக்கும், (திருக்குர்ஆன் 4:56) எனவே ஏகத்துவத்தில் உறுதியாக இருப்பதோடு, அல்லாஹ்விற்கு செய்யும் மற்ற வணக்கங்கள் விஷயத்திலும், பிற மனிதர்களின் உரிமை விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.
حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ, قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَذَّبُ نَاسٌ مِنْ أَهْلِ التَّوْحِيدِ فِي النَّارِ حَتَّى يَكُونُوا حُمَمًا فِيهَا, ثُمَّ تُدْرِكُهُمُ الرَّحْمَةُ, فَيَخْرُجُونَ فَيُلْقَوْنَ عَلَى بَابِ الْجَنَّةِ ، فَيَرُشُّ عَلَيْهِمْ أَهْلُ الْجَنَّةِ الْمَاءَ, فَيَنْبُتُونَ كَمَا يَنْبُتُ الْغُثَاءُ فِي حِمَالَةِ السَّيْلِ, ثُمَّ يَدْخُلُونَ الْجَنَّةَ
ﻣﺴﻨﺪ ﺃﺣﻤﺪ 14901

தவ்ஹீத்வாதிகளில் சிலர் (அவர்கள் செய்த வேறு பாவங்கள் காரணமாக) நரகில் வேதனை செய்யப்பட்டு (நரக நெருப்பின் தாக்கத்தால்) கரிக்கட்டை போல் ஆவார்கள். பின்னர் அவர்களுக்கு இறையருள் கிடைக்கும். நரகில் இருந்து வெளியேற்றப்பட்டு சொர்க்கத்தின் வாசலில் போடப்படுவார்கள். சொர்க்கவாசிகள் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். இதனால் அவர்கள் கரையோரத்தில் புல் முளைப்பது போல் பசுமையாவர்கள். பின்னர் சொர்க்கத்தில் நுழைவார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: அஹ்மத் 14901

Narrated Jabir bin Abdullah (ra):
The Messenger of Allah (sal) said: “Some of the people of Tawhid will be punished in the Fire until they are coals. Then the Mercy (of Allah) will reach them, they will be taken out and tossed at the doors of Paradise. The people of Paradise will pour water over them, and they will sprout as the debris carried by the flood sprouts, then they will enter Paradise“.
[Ahmad 14901]
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.
திருக்குர்ஆன் 66:6
தீமைகள் சம்பந்தமான அனைத்துப் பதிவுகளைக் காண இங்கேயும்ஷிர்க்சம்பந்தமான அனைத்துப் பதிவுகளைக் காண இங்கேயும்குப்ர் சம்பந்தமான அனைத்துப் பதிவுகளைக் காண இங்கேயும்பேச்சின் ஒழுங்குகள் சம்பந்தமான அனைத்துப் பதிவுகளைக் காண இங்கேயும்மறுமை சம்பந்தமான அனைத்துப் பதிவுகளைக் காண இங்கேயும் கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget