தினம் ஒரு ஹதீஸ்-290
எண்ணத்தைப் பொறுத்தே செயல்களுக்கான கூலி அமைகின்றன, எந்த ஒரு நற்செயலையும் அல்லாஹ்விற்காக மட்டுமே செய்ய வேண்டும், மாறாக பிறர் தன்னை புகழ வேண்டும் என்பதற்காக செய்வது முகஸ்துதி ஆகும், முகஸ்துதி என்பது சிறிய இணைவைத்தல், ஆனால் ஒருவர் முகஸ்துதிக்கு அல்லாமல், அல்லாஹ்விற்காக என்ற எண்ணத்துடன் மட்டுமே நற்செயல் புரிகிறார். அதற்காக அவரை மக்கள் பாராட்டினால் இதனால் அவருக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை, அது அவரின் நற்செயலுக்கு அல்லாஹ்வின் அங்கீகாரத்தை தெரிவிக்கும் நற்செய்தியாகும். ஆனால் இதனால் தற்பெருமை வந்து விடக்கூடாது, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ, حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ, حَدَّثَنَا شُعْبَةُ, عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ, عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ, عَنْ أَبِي ذَرٍّ, عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ, قَالَ قُلْتُ لَهُ الرَّجُلُ يَعْمَلُ الْعَمَلَ لِلَّهِ, فَيُحِبُّهُ النَّاسُ عَلَيْهِ قَالَ ذَلِكَ عَاجِلُ بُشْرَى الْمُؤْمِنِ
ﺳﻨﻦ ﺍﺑﻦ ﻣﺎﺟﻪ 4223
நபி (ஸல்) அவர்களிடம், “ஒரு மனிதர் (அல்லாஹ்விற்காக) நற்செயல் புரிகிறார். அதற்காக அவரை மக்கள் பாராட்டிப் பேசுகின்றனர். இதைப் பற்றித் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அது இறைநம்பிக்கையாளருக்கு முன் கூட்டியே வரும் நற்செய்தியாகும்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: இப்னுமாஜா 4223
Abu Dhar (ra) reported:
It was said to the Prophet (sal), What is your opinion about the person who has done good deeds and the people praise him? He said: It is glad tidings for a believer (in this life).
[Ibnmajah 4223]