அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

பெற்றோர்களின் மரணத்திற்குப் பிறகும் பிள்ளைகள் செய்ய வேண்டிய பணிவிடைகள்...

தினம் ஒரு ஹதீஸ்-489

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سُلَيْمَانَ، عَنْ أَسِيدِ بْنِ عَلِيِّ بْنِ عُبَيْدٍ، مَوْلَى بَنِي سَاعِدَةَ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي أُسَيْدٍ، مَالِكِ بْنِ رَبِيعَةَ قَالَ بَيْنَمَا نَحْنُ عِنْدَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ إِذْ جَاءَهُ رَجُلٌ مِنْ بَنِي سُلَيْمٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَبَقِيَ مِنْ بِرِّ أَبَوَىَّ شَىْءٌ أَبَرُّهُمَا بِهِ مِنْ بَعْدِ مَوْتِهِمَا قَالَ ‏ "نَعَمْ الصَّلاَةُ عَلَيْهِمَا وَالاِسْتِغْفَارُ لَهُمَا وَإِيفَاءٌ بِعُهُودِهِمَا مِنْ بَعْدِ مَوْتِهِمَا وَإِكْرَامُ صَدِيقِهِمَا وَصِلَةُ الرَّحِمِ الَّتِي لاَ تُوصَلُ إِلاَّ بِهِمَا ‏"‏ ‏ 
3664 ﺳﻨﻦ ﺍﺑﻦ ﻣﺎﺟﻪ

நாங்கள் நபி (ஸல்) அவர்களிடத்தில் இருந்த நேரத்தில் பனீ ஸலமா கோத்திரத்தைச் சார்ந்த ஒரு மனிதர் அவர்களிடம் வந்து ''அல்லாஹ்வின் தூதரே! எனது பெற்றோர்களின் மரணத்திற்குப் பிறகும் நான் அவர்களுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகள் ஏதாவது இருக்கிறதா?'' என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''ஆம், அவர்களுக்காக பிரார்த்தனை செய்வது , அவர்கள் இருவருக்காக பாவமன்னிப்புத் தேடுவது, அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, அவர்களின் நண்பர்களுக்கு கண்ணியம் செய்வது, அவர்களின் மூலமாக மட்டுமே சொந்தமாகக் கூடிய உறவுகளை இணைத்து வாழ்வது (இவைதான் நீ அவர்களுடைய மரணத்திற்குப் பிறகும் அவர்களுக்குச் செய்யக்கூடிய பணிவிடைகள்) ஆகும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ உசைத் - மாலிக் பின் ரபீஆ (ரலி)
நூல்: இப்னுமாஜா 3664

It was narrated that Abu Usaid - Malik bin Rabi'ah (ra), said: "While we were with the Prophet(sal), a man from the Banu Salamah came to him and said: "O messenger of Allah!, is there anyway of honoring my parents that I can still do for them after they die?' He said: "Yes offering the funeral prayer for them, praying for forgiveness for them, fulfilling their promises after their death, honoring their friends and upholding the ties of kinship which you would not have were it nor for them.'
[Ibn Majah 3664]

"என்னைத் தவிர யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் (தாய் தந்தை ஆகிய) அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி 'சீ' எனக் கூறாதீர்! அவ்விருவரையும் விரட்டாதீர்! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக! அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! "சிறுவனாக இருக்கும்போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!'' என்று கேட்பீராக!
திருக்குர்ஆன் 17:23, 24

தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தியுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.
திருக்குர்ஆன் 29:8

உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.
திருக்குர்ஆன் 31:15

Blogger Widget