அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

ஆதம் (அலை) அவர்கள் நபியா?

தினம் ஒரு ஹதீஸ்-522

أَخْبَرَنَا أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يُوسُفَ ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ زَنْجُوَيْهِ ، حَدَّثَنَا أَبُو تَوْبَةَ ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ سَلَّامٍ ، عَنْ أَخِيهِ زَيْدِ بْنِ سَلَّامٍ ، قَالَ : سَمِعْتُ أَبَا سَلَّامٍ ، قَالَ : سَمِعْتُ أَبَا أُمَامَةَ ، أَنَّ رَجُلًا ، قَالَ : يَا رَسُولَ اللَّهِ أَنَبِيٌّ كَانَ آدَمُ ؟ قَالَ : نَعَمْ ، مُكَلَّمٌ ، قَالَ : فَكَمْ كَانَ بَيْنَهُ وَبَيْنَ نُوحٍ ؟ قَالَ : عَشَرَةُ قُرُونٍ  
ﺻﺤﻴﺢ ﺍﺑﻦ ﺣﺒﺎﻥ 6296

ஒரு மனிதர் (நபி(ஸல்) அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே! ஆதம் (அலை) அவர்கள் நபியா?" என்று கேட்டார். அதற்கவர்கள், “ஆம், அவர் (அல்லாஹ்வுடன்) நேரடியாக உரையாடியவர்” என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர், “ஆதம் (அலை) அவர்களுக்கும், நூஹ் (அலை) அவர்களுக்கும் இடைப்பட்ட காலம் எவ்வளவு? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "பத்து நூற்றாண்டுகள்" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)
நூல்: இப்னுஹிப்பான் 6296

Narrated Abu Umamah (ra):
A man asked the Prophet (sal), O Messenger of Allah, was Adam (alai) a Prophet?” He said, “Yes, and Allah spoke to him.” The man asked, “How much (time) was there between him and Nooh (alai)?” He said, “Ten centuries.” 
[Ibnhibban 6296]
பின்னர்  அவரை  அவரது  இறைவன்  தேர்ந்தெடுத்தான். அவரை மன்னித்து  நேர்வழி காட்டினான்.   இருவரும்  ஒட்டுமொத்தமாக இங்கிருந்து  இறங்குங்கள்!  உங்களில்  சிலர் மற்றும்  சிலருக்கு பகைவர்களாவீர்கள்.  என்னிடமிருந்து  உங்களுக்கு  நேர்வழி வரும். அப்போது எனது நேர்வழியைப்  பின்பற்றுபவர்  வழிதவற மாட்டார். துர்பாக்கியசாலியாகவும் மாட்டார்.
அல்குர்ஆன் 20:122,123

Blogger Widget

இறந்தவருக்காக செய்யும் துஆவை உளப்பூர்வமாகச் செய்ய வேண்டும்...

தினம் ஒரு ஹதீஸ்-507

أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ سَهْلٍ الْأَعْرَجُ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، وَأَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، وَسَلْمَانَ الْأَغَرِ مَوْلَى جُهَيْنَةَ، كُلُّهُمْ حَدِّثُونِي، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا صَلَّيْتُمْ عَلَى الْجَنَازَةِ فَأَخْلِصُوا لَهَا الدُّعَاءَ 
ﺻﺤﻴﺢ ﺍﺑﻦ ﺣﺒﺎﻥ 3077

'இறந்தவருக்கு நீங்கள் தொழுகை நடத்தினால் அவருக்காக துஆவைக் கலப்பற்றதாக (உளப்பூர்வமாகச்) செய்யுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: இப்னுஹிப்பான் 3077

Narrated Abu Hurairah (ra):
I heard the Prophet (sal) saying: 'When you pray over the dead, make a sincere supplication for him'.
[Ibnhibban 3077]
ஜனாஸா சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கேயும்,  இங்கேயும் கிளிக் செய்யுங்கள்.

Blogger Widget

ஒருவருக்கு அல்லாஹ் நன்மையை நாடினால்…


தினம் ஒரு ஹதீஸ்-414

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي عَوْنٍ، قَالَ : حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، قَالَ : حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍأَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ إِذَا أَرَادَ اللَّهُ بِعَبْدٍ خَيْرًا يَسْتَعْمِلُهُ قِيلَ كَيْفَ يَسْتَعْمِلُهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ يُوَفِّقُهُ لِعَمَلٍ صَالِحٍ قَبْلَ الْمَوْتِ
ﺻﺤﻴﺢ ﺍﺑﻦ ﺣﺒﺎﻥ 346

ஒரு அடியாருக்கு அல்லாஹ் நன்மையை நாடினால் அவனை பயன்படுத்துவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் எப்படி பயன்படுத்துவான்?‘ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அந்த அடியாரின் மரணத்திற்கு முன் நல்லமல் புரி(ந்த நிலையில் மரணடை)யும் பாக்கியத்தை அவருக்கு வழங்குவான்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: இப்னுஹிப்பான் 346

It was narrated Anas bin Malik (ra) that The Messenger of Allah (sal) said: “When Allah wills good for His slave, He uses him.” They said, “O Messenger of Allah! How does He use him?” The Prophet (sal) said, “He guides him to do good deeds before he dies.
[Ibnhibban 346]
Blogger Widget

தொழுகையின் முக்கியத்துவம்…


தினம் ஒரு ஹதீஸ்-388

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ : حَدَّثَنَا سَلَمْةُ بْنُ شَبِيبٍ، قَالَ : حَدَّثَنَا الْمُقْرِئُ، قَالَ : حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، قَالَ : حَدَّثَنِي كَعْبُ بْنُ عَلْقَمَةَ، عَنْ عِيسَى بْنِ هِلالٍ الصَّدَفِي، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ ذَكَرَ الصَّلاةَ يَوْمًا فَقَالَ مَنْ حَافَظَ عَلَيْهَا كَانَتْ لَهُ نُورًا وَبُرْهَانًا وَنَجَاةً يَوْمَ الْقِيَامَةِ ، وَمَنْ لَمْ يُحَافِظْ عَلَيْهَا لَمْ يَكُنْ لَهُ بُرْهَانٌ وَلا نُورٌ وَلا نَجَاةٌ ، وَكَانَ يَوْمَ الْقِيَامَةِ مَعَ قَارُونَ وَهَامَانَ وَفِرْعَوْنَ وَأُبَيِّ بْنِ خَلَفٍ
ﺻﺤﻴﺢ ﺍﺑﻦ ﺣﺒﺎﻥ 1497

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தொழுகையைப் பற்றிக் கூறுகையில், “தொழுகையைப் பேணுதலாகத் தொழுது வருபவருக்கு அது கியாமத் நாளில் ஒளியாகவும், (விசாரணையின் போது) ஆதாரமாகவும், ஈடேற்றமாகவும் ஆகிவிடும். அதைப் பேணுதலாகத் தொழாதவர்களுக்கு, அது கியாமத் நாளில் ஒளியாகவோ, (விசாரணையின் போது) ஆதாரமாகவோ, ஈடேற்றமாகவோ இருக்காது. மேலும் தொழுகையை விட்டவர் கியாமத் நாளில்காரூன், ஹாமான், ஃபிர்அவ்ன் மற்றும் உபை பின் கலப் ஆகிய(கொடிய)வர்களுடன் இருப்பார்” என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: இப்னுஹிப்பான் 1497

Abdullah bin Amr (ra) reported:
The Prophet (sal) mention prayer one day and he said, “Whoever guards his prayers will have light and clarity and salvation on the Day of Resurrection. Whoever does not guard his prayers will not have light nor clarity nor salvation, and on the Day of Resurrection he will be with Qarun and Haman and Firaun and Ubay bin Khalaf.
[Ibnhibban 1497]
தொடர்புடைய பிற பதிவு:தொழுகையை விட்டால்…? . மேலும், தொழுகைசம்பந்தமாக எமது தளத்தின் அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget

நபி (ஸல்) அவர்களின் உரை…


தினம் ஒரு ஹதீஸ்-350

‎أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ : حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيَمَ الْمَوْصِلِيُّ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، قَالَ : حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى الِلَّهِ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ احْمَرَّتْ عَيْنَاهُ ، وَعَلا صَوْتُهُ ، وَاشْتَدَّ غَضَبُهُ حَتَّى كَأَنَّهُ نَذِيرُ جَيْشٍ ، يَقُولُ : صَبَّحَكُمْ وَمَسَّاكُمْ ، وَيَقُولُ بُعِثْتُ أَنَا وَالسَّاعَةِ كَهَاتَيْنِ يُفَرِّقُ بَيْنَ السَّبَّابَةِ وَالْوُسْطَى ، وَيَقُولُ أَمَّا بَعْدَ ، فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ ، وَخَيْرَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ ، وَإِنَّ شَرَّ الأُمُورِ مُحْدَثَاتُهَا ، وَكُلَّ بِدْعَةٍ ضَلالَةٌ ثُمَّ يَقُولُ أَنَا أَوْلَى بِكُلِّ مُؤْمِنٍ مِنْ نَفْسِهِ ، مَنْ تَرَكَ مَالا ، فَلأَهْلِهِ ، وَمَنْ تَرَكَ دَيْنًا أَوْ ضَيْعَةً فَإِلَيَّ وَعَلَيَّ
ﺻﺤﻴﺢ ﺍﺑﻦ ﺣﺒﺎﻥ 10

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தும்போது, அவர்களின் கண்கள் சிவந்துவிடும்; குரல் உயர்ந்துவிடும்; கோபம் மிகுந்துவிடும். எந்த அளவிற்கென்றால், எதிரிப் படையினர் தாக்குதல் தொடுக்கப் போவது குறித்து “எதிரிகள் காலையில் உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்; மாலையில் உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்” என்று கூறி அவர்கள் எச்சரிக்கை விடுப்பவரைப் போன்றிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நானும் மறுமை நாளும் இதோ இவ்விரு விரல்களைப் போன்று (நெருக்கமாக) அனுப்பப்பெற்றுள்ளோம்” என்று கூறியவாறு தம்முடைய சுட்டு விரலையும் நடு விரலையும் இணைத்துக் காட்டுவார்கள். மேலும், “அம்மா பஅத் (இறைவாழ்த்துக்குப் பின்!) உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப் படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்” என்று கூறுவார்கள். பிறகு “ஒவ்வோர் இறை நம்பிக்கையாளருக்கும் அவரது உயிரைவிட நான் நெருக்கமான (உரிமையுடைய)வன் ஆவேன். (ஆகவே,) எவர் (இறக்கும்போது) ஒரு செல்வத்தை விட்டுச்செல்கிறாரோ அது அவருடைய குடும்பத்தாருக்குரியதாகும். எவர் (இறக்கும்போது) ஒரு கடனை அல்லது (தம்மைத் தவிர வேறு எவரும் பராமரிக்க இல்லை என்ற நிலையில்) குடும்பத்தினர்களை விட்டுச்செல்கின்றாரோ அவர்கள் தங்கள் தேவைகளுக்காக என்னை அணுகட்டும். என்மீதே (அவர்களைப் பராமரிப்பதும், அவர்களது கடனை அடைப்பதும்) பொறுப்பாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: இப்னுஹிப்பான் 10

Narrated Jabir (ra):
When the Messenger of Allah (sal) delivered a sermon, his eyes would turn red, he would raise his voice and he would speak with intensity, as if he were warning of an (enemy) army, saying, ‘They will surely attack you in the morning, or they will surely attack you in the evening!’ He would say: ‘I and the Hour have been sent like these two,‘ and he would hold his index and middle finger. Then he would say: ‘Amma ba’d, (now then) The best of guidance is the guidance of Muhammad. The most evil matters are those that are newly-invented, and every innovation (Bid’ah) is a going astray.‘ And he used to say: ‘Whoever dies and leaves behind some wealth, it is for his family, and whoever leaves behind a debt or dependent children, then they are both my responsibility.‘”
[Ibn Hibban 10]

ஜுமுஆ சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget

அல்லாஹ்வை விட பொறுமையாளன் எவருமில்லை…


தினம் ஒரு ஹதீஸ்-332

أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ : حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، عَنْ يَحْيَى الْقَطَّانِ، عَنِ الأَعْمَشِ، قَالَ : حَدَّثَنَا سَعِيدُ بْنُ جُبَيْرٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَحَدٌ أَصْبَرَ عَلَى أَذًى يَسْمَعُهُ مِنَ اللَّهِ ، يَجْعَلُونَ لَهُ نِدًّا وَيَجْعَلُونَ لَهُ وَلَدًا ، وَهُوَ فِي ذَلِكَ يَرْزُقُهُمْ وَيُعَافِيهِمْ وَيُعْطِيهِمْ
ﺻﺤﻴﺢ ﺍﺑﻦ ﺣﺒﺎﻥ 648

மனவேதனைக்குள்ளாக்கும் செய்தியைக் கேட்டும் (உடனே தண்டித்துவிடாமல்) மிகவும் பொறுமைகாப்பவர் உயர்ந்தோன் அல்லாஹ்வைவிட வேறு யாருமில்லை. மனிதர்கள் (சிலர்) அவனுக்கு இணையை ஏற்படுத்துகின்றனர்; அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகின்றனர். அவ்வாறிருந்தும், அவர்களுக்கு உணவு வளத்தையும் உடல்நலத்தையும் (வேறு பல கொடைகளையும்) அவன் வழங்கிக் கொண்டிருக்கின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி)
நூல்: இப்னுஹிப்பான் 648

Abdullah bin Qais (ra) reported that Allah’s Messenger (sal) said, “None is more forbearing in listening to the most irksome things than Allah, the Exalted. They associate rivals with him, attribute sonhood to Him, but in spite of this He provides them sustenance, grants them safety, confers upon them so many things.
[Ibn Hibban 648]
மனிதர்களுடைய அநீதியின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைக்க மாட்டான். மாறாக குறிப்பிட்ட காலக்கெடு வரை அவர்களைப் பிற்படுத்தியிருக்கிறான். அவர்களின் கெடு வந்ததும் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 16:61
Blogger Widget

தனக்கு நல்லது செய்தவரிடத்தில் நன்றி கூற…


தினம் ஒரு ஹதீஸ்-265

أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، وَالْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْقَطَّانُ، قَالا : حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ، قَالَ : حَدَّثَنَا الأَحُوَصُ بْنُ جَوَّابٍ، قَالَ : حَدَّثَنَا سُعَيْرُ بْنُ الْخِمْسِ، قَالَ : حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صُنِعَ إِلَيْهِ مَعْرُوفٌ فَقَالَ لِفَاعِلِهِ جَزَاكَ اللَّهُ خَيْرًا فَقَدْ أَبْلَغَ فِي الثَّنَاءِ
ﺻﺤﻴﺢ ﺍﺑﻦ ﺣﺒﺎﻥ 3495

ஒருவர் தனக்கு நல்லது செய்யப்படும் போது அதைச் செய்தவரிடத்தில் ‘ஜஸாகல்லாஹு கைரா‘ (அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்குவானாக) எனக் கூறினால் அவர் (நன்றி கூறி) நிறைவாகப் புகழ்ந்தவராகி விடுவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உசாமா பின் ஸைத் (ரலி)
நூல்: இப்னுஹிப்பான் 3495

Usamah bin Zaid (ra) narrated that the Messenger of Allah (sal) said: “Whoever some good was done to him, and he says:Jazakallahu khaira‘ (May Allah reward you in goodness) then he has done the most that he can of praise.
[Ibn Hibban 3495]
Blogger Widget

மரணத் தருவாயில் உள்ளவருக்காக பிறர் செய்ய வேண்டியது...


தினம் ஒரு ஹதீஸ்-130

மரணத் தருவாயில் உள்ளவரிடம் பிறர் ஏகத்துவ உறுதிமொழியான லாயிலாஹ இல்லல்லாஹ்வை கூறச் சொல்ல வேண்டும், அப்படி அவர் இறப்பதற்கு முன் கூறிய கடைசி வார்த்தைகள் “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்றாகிவிடுமானால் அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிடும். அல்லாஹ் மன்னித்து அருள்புரிந்து விடுவானேயானால், நரகம் செல்லாமல் சொர்க்கம் செல்லவும் வாய்ப்புண்டு, இதர பாவங்களுக்காக தண்டிப்பதாக அல்லாஹ் முடிவெடுப்பானேயெனில், நரகத்தில் போட்டு அவன் நாடிய காலத்திற்குப் பின் சொர்க்கம் தருவான். இறப்பதற்கு முன்பாக “லாயிலாஹ இல்லல்லாஹ்” கூறிய காரணத்தினால் நிரந்தர நரகம் கிடைக்காது. அல்லாஹ் நமக்கு நல்லதையே கொடுப்பான் என்று அவன் மீது நல்லெண்ணம் கொண்ட நிலையிலேயே நாம் மரணிக்க வேண்டும், லாயிலாஹ இல்லல்லாஹ்வை மரணத் தருவாயில் உள்ள முஸ்லிமிடம் மட்டும் தான் கூறச் சொல்ல வேண்டும் என்பது கிடையாது, நமக்குத் தெரிந்த முஸ்லிமல்லாதவர்களிடமும் கூறச் சொல்லலாம்.
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الشَّرْقِيِّ ، قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ ، قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْفَارِسِيُّ ، قَالَ : حَدَّثَنَا الثَّوْرِيُّ ، عَنْ مَنْصُورٍ ، عَنْ هِلالِ بْنِ يَسَافٍ ، عَنِ الأَغَرِّ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " لَقِّنُوا مَوْتَاكُمْ لا إِلَهَ إِلا اللَّهُ ، فَإِنَّهُ مَنْ كَانَ آخِرُ كَلِمَتِهِ لا إِلَهَ إِلا اللَّهُ عِنْدَ الْمَوْتِ ، دَخَلَ الْجَنَّةَ يَوْمًا مِنَ الدَّهْرِ ، وَإِنْ أَصَابَهُ قَبْلَ ذَلِكَ مَا أَصَابَهُ

3080 ﺻﺤﻴﺢ ﺍﺑﻦ ﺣﺒﺎﻥ

உங்களில் மரணத் தருவாயில் உள்ளவர்களுக்கு “லாயிலாஹ இல்லல்லாஹ்” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லிக் கொடுங்கள், மரணிக்கும் போது எவரது கடைசிப் பேச்சு லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அமைந்து விடுகிறதோ அவர் என்றாவது ஒரு நாள் சொர்க்கத்தில் நுழைந்து விடுவார். இதற்கு முன்பு அவரிடமிருந்து எது ஏற்பட்டிருந்தாலும் சரியே” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: இப்னுஹிப்பான் 3080

Narrated Abu Hurairah (ra):
Allah’s Messenger (sal) as saying: Exhort your dying ones to say “Laa Ilaaha Illallah” (There is no god but Allah), for if a person’s last words are Laa ilaaha illallah at the time of death, he will enter Paradise at some point, no matter what befalls him before that. 
[Ibnhibban 3080]
Blogger Widget