அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

நற்பண்புடையவருக்கு மறுமையில் கிடைக்கும் அந்தஸ்து..

தினம் ஒரு ஹதீஸ்-508

ﺣَﺪَّﺛَﻨَﺎ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ قَالَ‏:‏ حَدَّثَنِي اللَّيْثُ قَالَ‏:‏ حَدَّثَنِي يَزِيدُ بْنُ الْهَادِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ‏:‏ أُخْبِرُكُمْ بِأَحَبِّكُمْ إِلَيَّ، وَأَقْرَبِكُمْ مِنِّي مَجْلِسًا يَوْمَ الْقِيَامَةِ‏؟‏ فَسَكَتَ الْقَوْمُ، فَأَعَادَهَا مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا، قَالَ الْقَوْمُ‏:‏ نَعَمْ يَا رَسُولَ اللهِ، قَالَ‏:‏ أَحْسَنُكُمْ خُلُقًا
ﺍﻷﺩﺏ ﺍﻟﻤﻔﺮﺩ ﻟﻠﺒﺨﺎﺭﻱ 272

'உங்களில் எனக்கு விருப்பமானவரும், மறுமையில் என்னிடம் நெருக்கத்திற்குரியவரும் யாரென்று நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். மக்கள் அமைதியாக இருந்தார்கள். பிறகும் அதே கேள்வியை இரண்டு அல்லது மூன்று முறை கேட்டார்கள். உடனே மக்கள், 'ஆம், அல்லாஹ்வின் தூதரே (அறிவியுங்கள்)' என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "உங்களில் நற்பண்புடையவரே" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: புகாரி / அல்-அதபுல் முஃப்ரத் 272

It was narrated from Abdullah bin ‘Amr (ra) that the Prophet (sal) said: "Shall I tell you about who is most beloved to me and the one who will be seated closest to me on the Day of Judgment?" The people were silent, so he repeated that two or three times. Then the people said, "Yes, O Messenger of Allah." He said, "The one among you with the best character."
[Bukhari / al-Adab al-Mufrad 272]

Blogger Widget

அல்லாஹ்விற்கு இணைவைக்காதவருக்கு வாரந்தோறும் கிடைக்கும் மன்னிப்பு...

தினம் ஒரு ஹதீஸ்-498

حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ‏:‏ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ‏:‏ تُفْتَحُ أَبْوَابُ الْجَنَّةِ يَوْمَ الِاثْنَيْنِ وَيَوْمَ الْخَمِيسِ، فَيُغْفَرُ لِكُلِّ عَبْدٍ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا، إِلاَّ رَجُلٌ كَانَتْ بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ، فَيُقَالُ‏:‏ أَنْظِرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا‏.
ﺍﻷﺩﺏ ﺍﻟﻤﻔﺮﺩ ﻟﻠﺒﺨﺎﺭﻱ 411

ஒவ்வொரு வியாழக்கிழமையும், திங்கட்கிழமையும் (மனிதர்களின் அனைத்துச்) செயல்களும் (அல்லாஹ்விடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. அன்றைய தினத்தில் தனக்கு எதையும் இணைவைக்காத ஒவ்வொரு மனிதருக்கும் அல்லாஹ் மன்னிப்பு அளிக்கின்றான்;   தனது சகோதரரிடம்  பகைமை உள்ள ஒரு மனிதரைத் தவிர. இவ்விருவரும் சமாதானமாகிக் கொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள்  என்று கூறப்படும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி / அல்-அதபுல் முஃப்ரத் 411

Abu Hurayra (ra) reported that the Messenger of Allah (sal) said, “The gates of the Garden are opened on Mondays and Thursdays. Every person who does not associate anything with Allah is forgiven except for someone who has enmity between existing between him and another man. It is said, 'Leave these two until they make peace.
[Bukhari / al-Adab al-Mufrad 411]

மேலும், ஷிர்க் சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget

அதிகமாக சிரிக்காதீர்கள்…


தினம் ஒரு ஹதீஸ்-397

சிரிப்பதையோ, நகைச்சுவை உணர்வுடன் இருப்பதையோ இஸ்லாம் தடை செய்யவில்லை, ஆனால் பொய் சொல்லி சிரிக்க வைக்கவோ, பிறரைஏமாற்றி, பயமுறுத்தி சிரிப்பதோ கூடாது, சிரிப்பதிலும் அளவு கடந்து போய் விடக் கூடாது, ஒரு முஸ்லிம் இம்மையை விட மறுமைக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதிகமாக சிரிப்பதானது இறைநினைவு, மரண, மறுமை சிந்தனையிலிருந்து நம்மை அப்புறப்படுத்தி விடும், அவ்வாறு இறைநினைவு அற்ற உள்ளமானது மரணித்த உள்ளமாகும்.
ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻣُﺤَﻤَّﺪُ ﺑْﻦُ ﺑَﺸَّﺎﺭٍ، ﻗَﺎﻝَ: ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺃَﺑُﻮ ﺑَﻜْﺮٍ ﺍﻟْﺤَﻨَﻔِﻲُّ، ﻗَﺎﻝَ: ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻋَﺒْﺪُ ﺍﻟْﺤَﻤِﻴﺪِ ﺑْﻦُ ﺟَﻌْﻔَﺮٍ، ﻋَﻦْ ﺇِﺑْﺮَﺍﻫِﻴﻢَ ﺑْﻦِ ﻋَﺒْﺪِ ﺍﻟﻠﻪِ، ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ، ﻋَﻦِ ﺍﻟﻨَّﺒِﻲِّ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗَﺎﻝَ ﻻَ ﺗُﻜْﺜِﺮُﻭﺍ ﺍﻟﻀَّﺤِﻚَ، ﻓَﺈِﻥَّ ﻛَﺜْﺮَﺓَ ﺍﻟﻀَّﺤِﻚِ ﺗُﻤِﻴﺖُ ﺍﻟْﻘَﻠْﺐَ
ﺍﻷﺩﺏ ﺍﻟﻤﻔﺮﺩ ﻟﻠﺒﺨﺎﺭﻱ 247

அதிகமாக சிரிக்காதீர்கள், ஏனென்றால் அதிகமாக சிரிப்பது (இறைநினைவிலிருந்து விலக்குவதன் மூலம்) உள்ளத்தை மரணிக்கச் செய்துவிடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி / அல்-அதபுல் முஃப்ரத் 247

It was narrated from Abu Hurairah (ra) that the Prophet (sal) said: “Do not laugh a lot, for laughing a lot deadens the heart (spiritually)
[Bukhari / al-Adab al-Mufrad 247]
Blogger Widget

கியாமத் நாளின் அடையாளங்கள் -9


தினம் ஒரு ஹதீஸ்-374

حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي ابْنُ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم قَالَ لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَطَاوَلَ النَّاسُ فِي الْبُنْيَانِ
ﺍﻷﺩﺏ ﺍﻟﻤﻔﺮﺩ ﻟﻠﺒﺨﺎﺭﻱ 446

மக்கள் ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டுக் கொண்டு அவர்களின் கட்டிடங்களை உயரமாக எழுப்பாதவரை யுகமுடிவு நாள் ஏற்படாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி / அல்-அதபுல் முஃப்ரத் 446

Abu Hurayra (ra) reported that the Messenger of Allah (sal) said, “The Final Hour will not come until people compete with one another in the height of their buildings.
[Bukhari / al-Adab al-Mufrad 446]
கியாமத் நாளின் அடையாளங்கள் சம்பந்தமான முந்தைய பதிவுகள்: 1,2,3,4,5,6,7,8
Blogger Widget