அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

உரை நிகழ்த்துபவர்களுக்காக…


தினம் ஒரு ஹதீஸ்-400

حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، وَحَجَّاجٌ، قَالَا : حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ : أَنْبَأَنَا أَبُو إِسْحَاق، قَالَ : سَمِعْتُ أَبَا عُبَيْدَةَيُحَدِّثُ ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ ‏عَلَّمَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خُطْبَةَ الْحَاجَةِ‏‎‏ ‏الْحَمْدُ لِلَّهِ أَوْ إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا ، مَنْ يَهْدِهِ اللَّهُ ، فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ ، فَلَا هَادِيَ لَهُ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ‏‎‏ ‏ثُمَّ يَقْرَأُ ثَلَاثَ آيَاتٍ‏‎‏ ‏يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلا تَمُوتُنَّ إِلا وَأَنْتُمْ مُسْلِمُونَ يَأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا‏‎‏ ‏ثُمَّ يَتَكَلَّمُ بِحَاجَتِهِ
ﺳﻨﻦ ﺍﻟﺪﺍﺭﻣﻲ 2134

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு (ஏதேனும்) தேவையினிமித்தம் உரை நிகழ்த்தும் முன் கூற வேண்டிய வாசகங்களைக் கற்றுத்தந்தார்கள். (அவ்வாசகங்களாவன:)அல்ஹம்துலில்லாஹி / இன்னல்ஹம்துலில்லாஹி நஹ்மதுஹூ வநஸ்தயீனுஹூ வநஸ்தஃபிருஹூ வநவூதுபில்லாஹி மின்ஷூருரி, அன்புஸினா, மன்யஹ்தில்லாஹூ ஃபலாமுழில்லஹூ வமன்யுழ்லில் ஃபலா ஹாதியலஹூ. அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹூ வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ(புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! / நிச்சயமாக, புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! அவனிடமே உதவி தேடுகிறோம். அவனிடமே பாவமன்னிப்பு தேடுகிறோம். எங்கள் உள்ளங்களின் தீங்குகளை விட்டும், நாங்கள் செய்த தீங்குகளிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டினானோ அவனை வழிகெடுப்போன் யாருமில்லை. யாரை அல்லாஹ் வழிதவறச் செய்து விட்டானோ அவனுக்கு நேர்வழி காட்டுவோன் யாரும் இல்லை. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்.) இதற்குப் பின் அல்குர்ஆனின் பின்வரும் மூன்று வசனங்களை ஓதினார்கள்: யா அய்யுஹல்லதீன் ஆமனூ இத்தகுல்லாஹ் ஹக்கதுகாதிஹி வலா தமூதுன்ன இல்லா வஅன்தும் முஸ்லிமூன். (3:102) (நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்! நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள்!)யா அய்யுஹன்னாஸுத்தகூ ரப்பகுமுல்லரீ கலககும் மின்னஃப்ஸின்வ் வாஹிததின் வகலக மின்ஹா ஸவ்ஜஹா வபஸ்ஸ மின்ஹுமா ரிஜாலன் கஸுரன்வ் வநிஸா வத்தகுல்லாஹல்லரீய் தஸாஅலூன பிஹி வல்அர்ஹாம் இன்னல்லாஹ கான அலைக்கும் ரகீபா (4:1) (மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.) யா அய்யுஹல்லதீன் ஆமனூ இத்தகுல்லாஹ் வகூலூ கவ்லன், ஸதீதா யுஸ்ஸிஹ் லகும் அஃமாலகும் வயஃபிர் லகும் துனூபக்கும் வமன்யுதியில்லாஹ வரசூலஹூ ஃபகத் ஃபாஜ ஃபவ்ஜன் அளீமா (33:70,71) (நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்! அவன் உங்களுக்காக உங்கள் செயல்களைச் சீராக்குவான். உங்களுக்காக உங்களின் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார்.) பின்னர் தமது உரையை நிகழ்த்தினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: தாரமீ 2134

Narrated Abdullah bin Mas’ud (ra):
The Messenger of Allah (sal) taught us the address in case of some need: Al-hamdu Lillaahi / Inal-hamdu Lillaahi nahmaduhu wanasta’eenahu wa nastaghfiruhu, wa na’oodhu billaahi min shuroori anfusinaa. Man yahdih Illaahu falaa mudilla lahu wa man yudlil falaa haadiya lahu. ashhadu an laa ilaaha ill-Allaah wa ashhadu anna Muhammadan ‘abduhu wa rasooluhu. (Praise be to Allah / Indeed, Praise be to Allah from Whom we ask help and pardon, and in Whom we take refuge from the evils within ourselves. He whom Allah guides has no one who can lead him astray, and he whom He leads astray has no one to guide him. I testify that there is no god but Allah, and I testify that Muhammad is His servant and Apostle). And then he read three verses: “Yaa ayyuha’lladheena aamanu-ttaqu’Llaaha haqqa tuqaatihi wa laa tamootunna illaa wa antum muslimoon (3:102) (you who believe, fear Allah as He should be feared, and die only as Muslims) “Yaa ayyuha’n-naas uttaqu rabbakum alladhi khalaqakum min nafsin waahidatin wa khalaqa minhaa zawjahaa wa baththa minhumaa rijaalan katheeran wa nisaa’an wa’ttaqu-Llaah alladhi tasaa’aloona bihi wa’l-arhaama inna Allaaha kaana ‘alaykum raqeebaa” (4:1) (O mankind! reverence your Guardian-Lord, who created you from a single person, created, of like nature, His mate, and from them twain scattered (like seeds) countless men and women;-reverence Allah, through whom ye demand your mutual (rights), and (reverence) the wombs (That bore you): for Allah ever watches over you) “Yaa ayyahu’lladheena aamanu-ttaqu’Llaaha wa qooloo qawlan sadeedan. Yuslih Lakum ‘A’maalakum Wa Yaghfir Lakum Dhunoobakum Wa Man Yuti’i Allaaha Wa Rasoolahu Faqad Faaza Fawzaan ‘Azeemaa” (33:70,71) (O who believe, fear Allah and say what is true. He will make your deeds sound, and forgive your sins. He who obeys Allah and His Apostle has achieved a mighty success.) and then he delivered the khutba.
[Darami 2134]
Blogger Widget

ஈமானும் நற்குணமும்…


தினம் ஒரு ஹதீஸ்-381

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا سَعِيدٌ هُوَ : ابْنُ أَبِي أَيُّوبَ، قَالَ : حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَجْلَانَ، عَنْ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا
ﺳﻨﻦ ﺍﻟﺪﺍﺭﻣﻲ 2706

எவர் குணத்தால் சிறந்தவரோ, அவரே முழுமையான ஈமான் கொண்ட இறைநம்பிக்கையாளர் ஆவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: தாரமீ 2706

Narrated Abu Hurairah (ra):
The Messenger of Allah (sal) said, “The most complete believer regarding his faith is the one who has the best behavior“.
[Darami 2706]

தொடர்புடைய பிற பதிவு: நன்னடத்தை…
Blogger Widget

சொர்க்கம்…


தினம் ஒரு ஹதீஸ்-346

أَخْبَرَنَا أَخْبَرَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّأَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ مَا لَا عَيْنٌ رَأَتْ وَلَا أُذُنٌ سَمِعَتْ ، وَلَا خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ فَلا تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ
ﺳﻨﻦ ﺍﻟﺪﺍﺭﻣﻲ 2741

எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் (கற்பனையிலும்) உதித்திராத இன்பங்களை என் நல்லடியார்களுக்காக நான் (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்” என்று அல்லாஹ் கூறினான். நீங்கள் விரும்பினால், ‘மனிதர்கள் எவரும் தமக்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண் குளிர்ச்சி (தரும் சொர்க்கத்து இன்பங்)களை அறிய மாட்டார்கள் (32:17)‘ என்னும் இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: தாரமீ 2741

Narrated Abu Huraira (ra):
Allah’s Messenger (sal) said, “Allah said, “I have prepared for My Pious slaves things which have never been seen by an eye, or heard by an ear, or imagined by a human being.” If you wish, you can recite this Verse from the Holy Qur’an “No soul knows what is kept hidden for them, of joy as a reward for what they used to do. (32:17)
[Darami 2741]
Blogger Widget

ஒரு தீமை நிகழ்ந்து விட்டால் அதைத் தொடர்ந்து உடனே நன்மையைச் செய்து விடுங்கள்…


தினம் ஒரு ஹதீஸ்-333

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ مَيْمُونِ بْنِ أَبِي شَبِيبٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّقِ اللَّهَ حَيْثُمَا كُنْتَ ، وَأَتْبِعْ السَّيِّئَةَ الْحَسَنَةَ تَمْحُهَا ، وَخَالِقْ النَّاسَ بِخُلُقٍ حَسَنٍ
ﺳﻨﻦ ﺍﻟﺪﺍﺭﻣﻲ 2705

நீங்கள் எங்கிருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள், ஒரு தீமை செய்து விட்டால் அதைத் தொடர்ந்து உடனே நன்மையைச் செய்து விடுங்கள். அது (முன் செய்த அத்)தீமையை அழித்து விடும். மக்களுடன் நற்குணத்துடன் பழகுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: தாரமீ 2705

Abu Dharr (ra) reported that The Messenger of Allah (sal) said, “Fear Allah wherever you are, do good deeds after doing bad ones, the former will wipe out the latter, and behave decently towards people“.
[Darami 2705]
Blogger Widget

நபியை நேசித்தல்…


தினம் ஒரு ஹதீஸ்-313

நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கு மாற்றமாக எவர் என்ன சொன்னாலும் அவைகளைத் தூக்கி எறிந்து விடவேண்டும், நாம் நபி (ஸல்) அவர்கள் கூற்றை மட்டுமே எடுத்துச் செயல்படுத்த வேண்டும், அது தான் நாம் மற்ற அனைவரையும் விட நபி (ஸல்) அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை நேசிக்கிறோம் என்று அர்த்தம், அதை விடுத்து நபிவழி இன்னதென்று தெரிந்தும் மற்றவர்களுக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அதைப் புறக்கணித்தால் அவர் உண்மையான இறைநம்பிக்கையாளராக ஆக முடியாது.
أَخْبَرَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، وَهَاشِمُ بْنُ الْقَاسِمِ, قَالَا : حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ ، وَوَلَدِهِ ، وَالنَّاسِ أَجْمَعِينَ
ﺳﻨﻦ ﺍﻟﺪﺍﺭﻣﻲ 2658

உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆக மாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: தாரமீ 2658

Narrated Anas (ra):
The Prophet (sal) said “None of you will have faith till he loves me more than his father, his children and all mankind.
[Darami 2658]
நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர்.
திருக்குர்ஆன் 33:6
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுயவிருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்பவர் தெளிவாக வழிகெட்டு விட்டார்.
திருக்குர்ஆன் 33:36
Blogger Widget

துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்களின் சிறப்பு…


தினம் ஒரு ஹதீஸ்-292

حَدَّثَنَا سَعِيدُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، قَالَ : سَمِعْتُ مُسْلِمًا الْبَطِينَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍرَضِيَ اللهِ عَنْهُمَا ، عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ مَا الْعَمَلُ ، فِي أَيَّامٍ أَفْضَلَ مِنْ الْعَمَلِ فِي عَشْرِ ذِي الْحِجَّةِقِيلَ وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ قَالَ وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ ، إِلَّا رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ ثُمَّ لَمْ يَرْجِعْ بِشَيْءٍ
ﺳﻨﻦ ﺍﻟﺪﺍﺭﻣﻲ 1726

துல்ஹஜ்ஜின் (முதல்) பத்து நாட்களில் நல்லறங்கள் செய்வதானது ஏனைய நாட்களில் அவற்றைச் செய்வதைவிட மிகவும் சிறந்ததாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள்அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும் சிறந்தது தான். ஆயினும் தனது உயிருடனும் தனது செல்வத்துடனும் புறப்பட்டுச் சென்று அவ்விரண்டில் எதையும் திரும்பக் கொண்டு வராத பேராளியைத் தவிர (அதாவது அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதானவரைத் தவிர) என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: தாரமீ 1726

Narrated Ibn `Abbas (ra):
The Prophet (sal) said, “No good deeds done on other days are superior to those done on (first) ten days of Dhul Hajj“. Then some companions of the Prophet (sal) said, “Not even Jihad for the sake of Allah?” He replied, “Not even Jihad for the sake of Allah, except that of a man who does it by putting himself and his property in danger (for Allah’s sake) and does not return with any of those things.
[Darami 1726]
Blogger Widget

பிராணிகள் விஷயத்தில் கவனம் தேவை…


தினம் ஒரு ஹதீஸ்-281

أَخْبَرَنَا الْحَكَمُ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَتِ امْرَأَةٌ النَّارَ فِي هِرَّةٍ ، فَقِيلَ : لَا أَنْتِ أَطْعَمْتِيهَا وَسَقَيْتِيهَا ، وَلَا أَنْتِ أَرْسَلْتِيهَا فَتَأْكُلَ مِنْ خَشَاشِ الْأَرْضِ
ﺳﻨﻦ ﺍﻟﺪﺍﺭﻣﻲ 2727

பூனையொன்றைச் சாகும்வரை கட்டி வைத்(துக் கொடுமைப்படுத்திய)தன் காரணத்தால் ஒரு பெண் நரகத்தில் நுழைந்தாள். அதைக் கட்டி வைத்திருந்த போது, அவள் அதற்குத் தீனியும் போடவில்லை; குடிப்பதற்கும் (எதுவும்) கொடுக்கவில்லை; பூமியின் புழுப்பூச்சி(கள் போன்ற அவற்றின் உணவு)களை (அதுவாக தேடித்) தின்பதற்கு அதை அவள் (அவிழ்த்து) விடவுமில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: தாரமீ 2727

Narrated Ibn `Umar (ra):
The Messenger of Allah (sal) said, “A woman entered the (Hell) Fire because of a cat which she had tied, neither giving it food nor setting it free to eat from the vermin of the earth.
[Darami 2727]
Blogger Widget

ருகூவிலும், ஸஜ்தாவிலும் முதுகை வளைவின்றி வைக்க வேண்டும்…


தினம் ஒரு ஹதீஸ்-243

أَخْبَرَنَا يَعْلَى بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ عُمَارَةَ هُوَ ابْنُ عُمَيْرٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تُجْزِئُ صَلَاةٌ لَا يُقِيمُ الرَّجُلُ فِيهَا صُلْبَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ
ﺳﻨﻦ ﺍﻟﺪﺍﺭﻣﻲ 1297

ருகூவிலும், ஸஜ்தாவிலும் எவர் தமது முதுகை (வளைவின்றி) நேராக வைக்கவில்லையோ அவரது தொழுகை (இறைவனால்) ஏற்றுக் கொள்ளப்படாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூமஸ்வூத் அல்-அன்சாரீ அல்-பத்ரீ (ரலி)
நூல்: தாரமீ 1297

Abu Mas’ud Al-Ansari Al-Badri (ra) narrated that : Allah’s Messenger (sal) said: “The Salah is not acceptable to one who does not keep his back straight in ruku and sajdah
[Darami 1297]
தொழுகை சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget