அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

தோழர்களில் / அண்டைவீட்டார்களில் அல்லாஹ்விடத்தில் சிறந்தவர்...

தினம் ஒரு ஹதீஸ்-472

ثنا الْحَسَنُ بْنُ الْحَسَنِ ، أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ ، أَخْبَرَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ ، حَدَّثَنِي شُرَحْبِيلُ ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ خَيْرُ الأَصْحَابِ عِنْدَ اللَّهِ خَيْرُهُمْ لِصَاحِبِهِ ، وَخَيْرُ الْجِيرَانِ عِنْدَ اللَّهِ خَيْرُهُمْ لِجَارِهِ   
ﺻﺤﻴﺢ ﺍﺑﻦ ﺧﺰﻳﻤﺔ 2369

யார் தன்னுடைய தோழரிடத்தில் சிறந்தவராக இருக்கிறாரோ, அவரே தோழர்களில் அல்லாஹ்விடத்தில் சிறந்தவராவார் ; யார் தன்னுடைய அண்டை வீட்டாரிடத்தில் சிறந்தவராக இருக்கிறாரோ, அவரே அண்டை வீட்டார்களில் அல்லாஹ்விடத்தில் சிறந்தவராவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: இப்னுகுஸைமா 2369

Narrated Abdullah bin Amr (ra):
The Prophet (sal) said, “The best of companions according to Allah are those who are best to their companion and the best of neighbors according to Allah are those that are best to their neighbor"
[Ibn Khuzaymah 2369]


தொடர்புடைய பிற பதிவுகள்:


Blogger Widget

தம்மிடமிருப்பதில் சிறந்த ஆடையை அணிந்து ஜுமுஆவிற்குச் செல்ல வேண்டும்…


தினம் ஒரு ஹதீஸ்-411

نا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، ثنا شُعَيْبٌ، نا اللَّيْثُ، عَنِ ابْنِ عَجْلانَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ وَدِيعَةَ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ ، فَأَحْسَنَ الْغُسْلَ, ثُمَّ لَبِسَ مِنْ صَالِحِ ثِيَابِهِ, ثُمَّ مَسَّ مِنْ دُهْنِ بَيْتِهِ مَا كَتَبَ اللَّهُ لَهُ, أَوْ مِنْ طِيبِهِ, ثُمَّ لَمْ يُفَرِّقْ بَيْنَ اثْنَيْنِ كَفَّرَ اللَّهُ عَنْهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ قَبْلَهَا
ﺻﺤﻴﺢ ﺍﺑﻦ ﺧﺰﻳﻤﺔ 1670

ஜுமுஆ நாளில் ஒருவர் நல்ல முறையில் குளித்து தூய்மையாகி, தம்மிடமிருப்பதில் சிறந்த ஆடையை அணிந்து, தம்மிடமுள்ள எண்ணெயைத் தேய்த்துக் கொள்கிறார். பிறகு புறப்பட்டு (நெரிசலை உருவாக்கும் விதமாக) இருவரை பிரித்துக் கொண்டு வராமல் (பள்ளிக்கு) வந்து தமக்கு விதியாக்கப்பட்டுள்ளதைத் தொழுகிறார் எனில், அவருக்கு அந்த ஜுமுஆவுக்கும் அதற்கு முந்தைய ஜுமுஆவுக்கும் இடையிலேற்பட்ட பாவங்கள் மன்னிக்கப்பட்டே தீருகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: இப்னுகுஸைமா 1670

Narrated Abu Dhar (ra):
The Prophet (sal) said, “Whoever takes a bath on Friday, purifies himself as much as he can, wears the best of his clothes, then uses his (hair) oil, then proceeds (for the Jumuah prayer) and does not separate two persons sitting together (in the mosque), then prays as much as (Allah has) written for him, and his sins in-between the present and the last Friday would be forgiven.
[Ibn Khuzaymah 1670]

ஜுமுஆ சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget

உபரித் தொழுகைகளை வீட்டில் தொழுவதே சிறந்தது…


தினம் ஒரு ஹதீஸ்-337

“உங்கள் இல்லங்களிலும் சில தொழுகைகளைத் தொழுங்கள்! அவற்றை அடக்கஸ்தலங்களாக ஆக்கி விடாதீர்கள்!” (புகாரி 432), கடமையான ஐவேளைத் தொழுகைகளை பள்ளியில் தொழுது விட்டு, உபரியான தொழுகைகளை வீட்டில் தொழுது கொள்வதை செயல்படுத்த வேண்டும், உபரியானவைகளையும் பள்ளியில் தொழ அனுமதி இருந்தாலும், வீடுகளில் தொழுவது சிறந்தது, அப்படி எந்த தொழுகையும் செயல்படுத்தப்படாத வீடானது இறந்தவர்கள் புதைக்கப்பட்டிருக்கும் மையவாடிக்கு ஒப்பானது.
ثنا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ الْقَيْسِيُّ، ثنا عَفَّانُ، ثنا وُهَيْبٌ، نَا مُوسَى بْنُ عُقْبَةَ، قَالَ : سَمِعْتُ سَالِمًا أَبَا النَّضْرِيُحَدِّثُ ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ: أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ فَصَلُّوا أَيُّهَا النَّاسُ فِي بُيُوتِكُمْ ، فَإِنَّ أَفْضَلَ صَلاةِ الْمَرْءِ فِي بَيْتِهِ إِلا الْمَكْتُوبَةَ
ﺻﺤﻴﺢ ﺍﺑﻦ ﺧﺰﻳﻤﺔ 1143

மக்களே! (உபரியானத் தொழுகைகளை) உங்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள். கடமையான (ஐவேளைத்) தொழுகைகள் தவிர பிற தொழுகைகளை ஒருவர் தனது வீட்டில் தொழுவதே சிறந்தது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி)
நூல்: இப்னுகுஸைமா 1143

Narrated Zaid bin Thabit (ra):
Allah’s Messenger (sal) said, “O People! You should pray in your houses, for the best prayer of a person is that which he prays in his house except the compulsory prayers.
[Ibn Khuzaymah 1143]
தொழுகை சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget

பாவங்கள் மன்னிக்கப்பட்டு, மறுமையில் நமது தகுதிகள் உயர்த்தப்பட…


தினம் ஒரு ஹதீஸ்-303

‎ثنا عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، ثنا إِسْمَاعِيلُ يَعْنِي ابْنَ جَعْفَرٍ، ثنا الْعَلاءُ وَهُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ. ح وَحَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ الْعَقَدِيُّ، ثنا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، ثنا رَوْحُ بْنُ الْقَاسِمِ، ثنا الْعَلاءُ. ح وَحَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الأَعْلَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَنَّ مَالِكًاحَدَّثَهُ ، عَنِ الْعَلاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلا أَدُلُّكُمْ عَلَى مَا يَمْحُو اللَّهُ بِهِ الْخَطَايَا ، وَيَرْفَعُ بِهِ الدَّرَجَاتِ قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ إِسْبَاغُ الْوُضُوءِ عَلَى الْمَكَارِهِ ، وَكَثْرَةُ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ ، وَانْتِظَارُ الصَّلاةِ بَعْدَ الصَّلاةِ ، فَذَلِكُمُ الرِّبَاطُ ، فَذَلِكُمُ الرِّبَاطُ
ﺻﺤﻴﺢ ﺍﺑﻦ ﺧﺰﻳﻤﺔ 5

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா? என்று கேட்டார்கள். மக்கள்,ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!என்று கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அவை:) சிரமமான சூழ்நிலைகளிலும் உளூவை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்துவைத்துச் செல்வதும், ஒரு தொழுகை(யை முடித்துச்) சென்ற பின் அடுத்தத் தொழுகைக்காக (அதன் நேரத்தை) எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவைகள் தாம் (அதற்குரிய) வழிமுறைகளாகும்; இவைகள் தாம் (அதற்குரிய) வழிமுறைகளாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: இப்னுகுஸைமா 5

Abu Huraira (ra) reported:
The Messenger of Allah (sal) said: Should I not suggest to you that by which Allah obliterates the sins and elevates the ranks (of a man). They (the hearers) said: Yes, Messenger of Allah. He said: Performing the ablution thoroughly despite odds, tranverside of more paces towards the mosque, and waiting for the next prayer after observing a prayer, that is mindfulness; that is mindfulness.
[Ibn Khuzaymah 5]
Blogger Widget

நரகில் சேர்க்கும் பித்அத்…


தினம் ஒரு ஹதீஸ்-125

அல்லாஹ்வும், அவனது தூதரும் மார்க்கமாக்கிய செயல்களைத் தவிர்த்து வேறு செயல்களை மார்க்கம் என்ற பெயரில் செய்வது பித்அத் எனப்படும், மார்க்கம் கூறாத ஒன்றை மார்க்கத்தில் உள்ளது போல் செய்யும் ஒவ்வொரு செயலுமே நரகத்தில் சேர்த்து விடும்.
نا الْحُسَيْنُ بْنُ عِيسَى الْبِسْطَامِيُّ، نا أَنَسٌ يَعْنِي ابْنَ عِيَاضٍ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ. ح وَحَدَّثَنَا عُتْبَةُ بْنُ عَبْدِ اللَّهِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أنا سُفْيَانُ، عَنْ جَعْفَرٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي خُطْبَتِهِ : يَحْمَدُ اللَّهَ, وَيُثْنِي عَلَيْهِ بِمَا هُوَ لَهُ أَهْلٌ, ثُمَّ يَقُولُ مَنْ يَهْدِ اللَّهُ فَلا مُضِلَّ لَهُ, وَمَنْ يُضْلِلْ فَلا هَادِيَ لَهُ, إِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ, وَأَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ, وَشَرَّ الأُمُورِ مُحْدَثَاتُهَا, وَكُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٌ, وَكُلَّ بِدْعَةٍ ضَلالَةٌ, وَكُلَّ ضَلالَةٍ فِي النَّارِ
ﺻﺤﻴﺢ ﺍﺑﻦ ﺧﺰﻳﻤﺔ 1689

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது உரையின் போது அல்லாஹ்வை அவனது தகுதிக்கு ஏற்ப புகழ்ந்து விட்டு, “அல்லாஹ், யாருக்கு நேர்வழி காட்டினானோ அவரை வழிகெடுப்பவர் எவருமில்லை. அவன் யாரை வழி கேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் எவருமில்லை. செய்திகளில் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் அழகியது முஹம்மதின் வழியாகும். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டதாகும். புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடு ஆகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: ஸஹீஹ் இப்னு குஸைமா 1689

Narrated Jabir bin ‘Abdullah (ra):
“In his Khutbah the Messenger of Allah (sal) used to praise Allah as He deserves to be praised, then he would say: ‘Whomsoever Allah guides, none can lead him astray, and whomsoever Allah sends astray, none can guide. The truest of word is the Book of Allah and best of guidance is the guidance of Muhammad. The worst of things are those that are newly invented; every newly-invented thing is an innovation and every innovation is going astray, and every going astray is in the Fire.
[Sahih Ibn Khuzaymah 1689]
இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.
திருக்குர்ஆன் 5:3
உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 49:16
அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது.
திருக்குர்ஆன் 42:21
Blogger Widget