அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

ஜியாரத்திற்கான அனுமதி ...

தினம் ஒரு ஹதீஸ்-482

 حدثنا أبو بكر محمد بن إسحاق الفقيه ، أنبأ أبو المثنى معاذ بن المثنى ، ثنا محمد بن المنهال الضرير ، ثنا يزيد بن زريع ، ثنا بسطام بن مسلم ، عن أبي التياح يزيد بن حميد ، عن عبد الله بن أبي مليكة ، أن عائشة أقبلت ذات يوم من المقابر فقلت لها : يا أم المؤمنين ، من أين أقبلت ؟ قالت : من قبر أخي عبد الرحمن بن أبي بكر ، فقلت لها : أليس كان رسول الله صلى الله عليه وسلم نهى عن زيارة القبور ؟ قالت : نعم ، كان قد نهى ، ثم أمر بزيارتها 
ﺍﻟﻤﺴﺘﺪﺭﻙ ﻋﻠﻰ ﺍﻟﺼﺤﻴﺤﻴﻦ ﻟﻠﺤﺎﻛﻢ 1432

ஒரு நாள் ஆயிஷா (ரலி) அவர்கள் மண்ணறைகளைச் சந்தித்துவிட்டு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் "இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "என் சகோதரர் அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் அவர்களின் மண்ணறையிலிருந்து வருகிறேன் என்று பதிலளித்தார்கள். மண்ணறைகளுக்குச் செல்லக் கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்யவில்லையா? என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் "ஆம் முதலில் தடை செய்திருந்தார்கள். பிறகு அவற்றைச் சந்திக்க ஏவினார்கள்" எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீமுலைகா (ரஹ்)
நூல்: ஹாகிம் / அல்-முஸ்தத்ரக் அலா அல்-ஸஹீஹைன் 1432

Narrated Abdullah Ibn Abi Mulaykah (rah):
Once 'Aishah (ra) returned after visiting the graveyard. I asked, 'O Mother of the Believers, where have you been?' She said: 'I went out to visit the grave of my brother Abdur-Rahman bin AbiBakr.' I asked her: 'Didn't the Messenger of Allah (sal), prohibit visiting graves?' She said, 'Yes, he did forbid visiting graves during the early days, but later on he ordered us to visit them'.
[Hakim / al-Mustadrak alaa al-Sahihain 1432]
Blogger Widget

மூன்றைத் தவிர்த்த நிலையில் மரணம் வந்தால் சொர்க்கம்…


தினம் ஒரு ஹதீஸ்-419

أَخْبَرَنَاهُ أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ الْفَقِيهُبِبَغْدَادَ ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ شَاكِرٍ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، وَعَفَّانُ بْنُ مُسْلِمٍ، قَالا : حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ ثَوْبَانَ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ مَاتَ وَهُوَ بَرِيءٌ مِنْ ثَلاثٍ الْكِبْرُ وَالْغُلُولُ وَالدَّيْنُ دَخَلَ الْجَنَّةَ
ﺍﻟﻤﺴﺘﺪﺭﻙ ﻋﻠﻰ ﺍﻟﺼﺤﻴﺤﻴﻦ ﻟﻠﺤﺎﻛﻢ 2156

பெருமை, மோசடி மற்றும் கடன் ஆகிய மூன்றை விட்டும் விலகியிருந்த நிலையில் எவர் மரணமடைவாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)
நூல்: ஹாகிம் / அல்-முஸ்தத்ரக் அலா அல்-ஸஹீஹைன் 2156

It was narrated Shawban (ra), that the Messenger of Allah (sal) said, “Whoever dies and he is free of three: Pride, Deceit, and debt, he will enter paradise.
[Hakim / al-Mustadrak alaa al-Sahihain 2156]
Blogger Widget

சொர்க்கவாசி என்று நற்செய்தி கூறப்பட்டவர்கள் -3


தினம் ஒரு ஹதீஸ்-120

أخبرني عبد الله بن محمد بن علي بن زيادالعدل ، ثنا الإمام أبو بكر محمد بن إسحاق، ثنا أبو سعيد الأشج، ثنا أبو معاوية ، عن هشام بن عروة، عن أبيه ، عن عائشة رضي الله عنها ، أن النبي صلى الله عليه وآله وسلم قال لا تسبوا ورقة فإني رأيت له جنة أو جنتين
ﺍﻟﻤﺴﺘﺪﺭﻙ ﻋﻠﻰ ﺍﻟﺼﺤﻴﺤﻴﻦ ﻟﻠﺤﺎﻛﻢ 4142
‎‏

வரக்கா பின் நவ்ஃபல் அவர்களை ஏசாதீர்கள். அவருக்கு ஒன்று அல்லது இரண்டு சொர்க்கத்தோட்டங்கள் தரப்படுவதாக எனக்கு காட்டப்பட்டது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: ஹாகிம் / அல்-முஸ்தத்ரக் அலா அல்-ஸஹீஹைன் 4142

Narrated Aisha (ra):
The Prophet (sal) said: “Do not slander Waraka bin Nawfal, for I have seen that he will have one or two gardens in Paradise.
[Hakim / al-Mustadrak alaa al-Sahihain 4142]

அப்போது வரக்கா நபி (ஸல்) அவர்களிடம், என் சகோதரர் மகனே! நீங்கள் என்ன பார்த்தீர்கள்? எனக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றின் விவரத்தை அவரிடம் சொன்னார்கள். (இதைக் கேட்ட) வரக்கா,(நீர் கண்ட) இவர்தாம், (இறைத்தூதர்) மூஸாவிடம் இறைவன் அனுப்பிய வானவர் (ஜிப்ரீல்) ஆவார் என்று நபியவர்களிடம் கூறிவிட்டு, (மகனே!) உம்மை உம் சமூகத்தார் (உமது நாட்டிலிருந்து) வெளியேற்றும் அந்த சமயத்தில் நான் திடகாத்திரமானவனாக இருந்தால் நன்றாயிருக்குமே! நான் அந்தத் தருணத்தில் உயிரோடு இருந்தால் நன்றாயிருக்குமே! என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (என் சமூக) மக்கள் என்னை (நாட்டை விட்டு) வெளியேற்றவா செய்வார்கள்? என்று கேட்க, வரக்கா, ஆம், நீங்கள் பெற்றுள்ள (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற (இறைத்தூதர்) எவரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. உங்களது (தூதுவப்பணி பரவலாகும்) நாளை நான் அடைந்தால் உங்களுக்குப் பலமான உதவி செய்வேன் என்று சொன்னார். அதன் பின் வரக்கா நீண்ட நாள் இராமல் இறந்து விட்டார்.(புகாரி 3)

அறிந்துகொள்ளுங்கள்; சொர்க்கத்தில் முஸ்லிமைத் தவிர வேறெவரும் நுழைய முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 378)

தொடர்புடைய பிற பதிவுகள்: சொர்க்கவாசி என்று நற்செய்தி கூறப்பட்டவர்கள் 1 ,2
Blogger Widget