அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

தலைமுடியைப் பராமரிப்பது அவசியமானதாகும்..


தினம் ஒரு ஹதீஸ்-320

حَدَّثَنَا مُعَاذٌ، قَالَ : نا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، وَدَاوُدُ بْنُ عَمْرٍو، قَالَ : نا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الزِّنَادِ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ كَانَ لَهُ شَعْرٌ فَلْيُكْرِمْهُ
ﺍﻟﻤﻌﺠﻢ ﺍﻷﻭﺳﻂ ﻟﻠﻄﺒﺮﺍﻧﻲ 8706

யாருக்கு தலைமுடி இருக்கிறதோ அவர் அதற்கு மதிப்பளிக்கட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: தப்ரானீ / அல் முஃஜமுல் அவ்ஸத் 8706

Narrated AbuHurayrah (ra):
The Messenger of Allah (sal) said: He who has hair should honour it.
[Tabrani / al-Mu`jam al-awsat 8706]
Blogger Widget

இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் செய்த நற்செயல்களின் நிலை…


தினம் ஒரு ஹதீஸ்-282

இணைவைத்த நிலையிலோ, அல்லது இறைநிராகரிப்பு மேற்கொண்ட நிலையிலோ செய்யப்படும் எந்த ஒரு நற்செயலுக்கும் அல்லாஹ்விடம் மறுமையில் எந்த நன்மையும் கிடைக்காது, அக்கொள்கையை விட்டு மனம் திருந்தி ஒருவர் இஸ்லாத்தை தனது வாழ்வியல்நெறியாக ஏற்றுக்கொள்வாரெனில், முன்பு முஸ்லிமல்லாத நிலையில் செய்த நற்செயலுக்கும் மறுமையில் நன்மை கிடைக்கும்.
حَدَّثَنَا مُوسَى بْنُ هَارُونَ، ثنا أَبُو خَيْثَمَةَ زُهَيْرُ بْنُ حَرْبٍ، ثنا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمِ بْنِ سَعْدٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ حَكِيمَ بْنَ حِزَامٍأَ خْبَرَهُ ، أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ ، أَرَأَيْتَ أُمُورًا كُنْتُ أَتَحَنَّثُ بِهَا فِي الْجَاهِلِيَّةِ مِنْ صَدَقَةٍ أَوْ عَتَاقَةٍ أَوْ صِلَةِ رَحِمٍ ، أَفِيهَا أَجْرٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْلَمْتَ عَلَى مَا أَسْلَفْتَ مِنْ خَيْرٍ
ﺍﻟﻤﻌﺠﻢ ﺍﻟﻜﺒﻴﺮ ﻟﻠﻄﺒﺮﺍﻧﻲ 3021

அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்தில் தர்மம், அடிமை விடுதலை, உறவைப் பேணுதல் ஆகிய நல்லறங்களைப் புரிந்துள்ளேன். அவற்றுக்கு (மறுமையில்) நற்கூலி உண்டா, கூறுங்கள்?” என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு, “நீங்கள் முன்னர் செய்த நற்செயல்களுடன்தான் இஸ்லாத்தை ஏற்று இருக்கின்றீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஹகீம் பின் ஹிஸாம் (ரலி)
நூல்: தப்ரானீ / அல்முஃஜமுல் கபீர் 3021

Narrated Hakim bin Hizam (ra):
I said to the Prophet (sal), “O Messenger of Allah!, do you think if there is any reward (of the Lord with me on the Day of Resurrection) for the deeds of religious purification that I performed in the state of ignorance, such as charity, freeing a slave, cementing of blood-relations?” Upon this he (the Apostle of Allah) said to him: You have accepted Islam with all the previous virtues that you had practised.
[Tabrani / Al-Mu'jam al-kabir 3021]
Blogger Widget

பாவமன்னிப்புக் கோருவதன் சிறப்பு…


தினம் ஒரு ஹதீஸ்-263

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الْعَزِيزِ، ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الرَّقَاشِيُّ، ثنا وُهَيْبُ بْنُ خَالِدٍ، عَنْ مَعْمَرٍ، عَنْ عَبْدِ الْكَرِيمِ، عَنْ أَبِي عُبَيْدَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ التَّائِبُ مِنَ الذُّنُوبِ كَمَنْ لا ذَنْبَ لَهُ
ﺍﻟﺪﻋﺎﺀ ﻟﻠﻄﺒﺮﺍﻧﻲ 1700

ஒருவர் தாம் செய்த பாவத்திற்கு (அல்லாஹ்விடம், மனம் வருந்தி) மன்னிப்புக் கோரினால், அவர் அப்பாவத்தை செய்யாதவரைப் போன்றவராவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: தப்ரானீ / அத்துஆ 1700

Narrated ‘Abdullah bin Mas’ud (ra):
The Messenger of Allah (sal) said: ‘The one who repents from sin is like one who did not sin.
[Tabarani / ad-Dua 1700]
அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 12:87
தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!
திருக்குர்ஆன் 39:53

தொடர்புடைய பிற பதிவுகள்:

Blogger Widget

அந்நிய பெண்ணைத் தொடுதல்…


தினம் ஒரு ஹதீஸ்-176

حَدَّثَنَا مُوسَى بْنُ هَارُونَ، ثنا إِسْحَاقُ بْنُ رَاهَوَيْهِ، أَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، ثنا شَدَّادُ بْنُ سَعِيدٍ الرَّاسِبِيُّ، قَالَ : سَمِعْتُ يَزِيدَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ، يَقُولُ : سَمِعْتُ مَعْقِلَ بْنَ يَسَارٍ، يَقُولُ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” لأَنْ يُطْعَنَ فِي رَأْسِ أَحَدِكُمْ بِمِخْيَطٍ مِنْ حَدِيدٍ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَمَسَّ امْرَأَةً لا تَحِلُّ لَهُ “
المعجم الكبير للطبراني 16910‎

உங்களில் ஒருவர் தனக்கு ஹலால் இல்லாத பெண்ணை தொடுவதை விட இரும்பு ஊசியால் தன்னுடைய தலையை காயப்படுத்திக் கொள்வது சிறந்ததாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: மஃகில் பின் யஸார் (ரலி)
நூல்: தப்ரானீ / அல்முஃஜமுல் கபீர் 16910

Narrated Ma’qil ibn Yassar (ra):
The Messenger of Allah (sal) said: “For one of you to be stabbed in the head with an iron needle is better for him than to touch a woman who is not permissible for him
[Tabrani / Al-Mu'jam al-kabir 16910]
தொடர்புடைய பிற பதிவு: அழகிய முன் மாதிரி-4
Blogger Widget