தினம் ஒரு ஹதீஸ்-516
حَدَّثَنَا عِيسَى بْنُ مُحَمَّدٍ الرَّمْلِيُّ، وَابْنُ، عَوْفٍ - وَهَذَا لَفْظُهُ - قَالاَ حَدَّثَنَا الْفِرْيَابِيُّ، عَنْ سُفْيَانَ، عَنْ ثَوْرٍ، عَنْ رَاشِدِ بْنِ سَعْدٍ، عَنْ مُعَاوِيَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ إِنَّكَ إِنِ اتَّبَعْتَ عَوْرَاتِ النَّاسِ أَفْسَدْتَهُمْ أَوْ كِدْتَ أَنْ تُفْسِدَهُمْ
4888 ﺳﻨﻦ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ
"மக்களின் குறைகளை நீ ஆராய்ந்தால், நீ அவர்களை பாழாக்கிவிட்டாய் அல்லது பாழாக்கிட முயற்சித்தவராவாய்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: முஆவியா (ரலி)
நூல்: அபூதாவூத் 4888
Narrated Mu'awiyah (ra):
I heard the Messenger of Allah (sal) say: If you search for the faults of the people, you will corrupt them, or will nearly corrupt them.
[Abudawud 4888]
குறை கூறிப் புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான்.
திருக்குர்ஆன் 104:1
நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன் 49:12