அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

கியாமத் நாளின் அடையாளங்கள் -2


தினம் ஒரு ஹதீஸ்-124

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي أَسْمَاءَ الرَّحَبِيِّ، عَنْ ثَوْبَانَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَلْحَقَ قَبَائِلُ مِنْ أُمَّتِي بِالْمُشْرِكِينَ وَحَتَّى يَعْبُدُوا الأَوْثَانَ وَإِنَّهُ سَيَكُونُ فِي أُمَّتِي ثَلاَثُونَ كَذَّابُونَ كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ وَأَنَا خَاتَمُ النَّبِيِّينَ لاَ نَبِيَّ بَعْدِي
ﺳﻨﻦ ﺍﻟﺘﺮﻣﺬﻱ 2149

என்னுடைய உம்மத்தில் சில கூட்டங்கள் இணைவைப்பவர்களுடன் சேர்ந்து சிலைகளைக் கூட வணங்குவார்கள். மேலும் என் உம்மத்தில் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள். இவர்கள் அனைவரும் தன்னை நபி என்றே வாதிடுவார்கள். இந்நிலை ஏற்படும் வரை மறுமைநாள் ஏற்படாது. நான்தான் இறுதி நபி எனக்குப் பின் எந்த நபியும் கிடையாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)
நூல்: திர்மிதீ 2149

Shawban (ra) narrated that the Messenger of Allah (sal) said: “The Hour shall not be established until tribes of my Ummah unite with the idolaters, and until they worship idols. And indeed there shall be thirty imposters in my Ummah, each of them claiming that he is a Prophet. And I am the last of the Prophets, there is no Prophet after me.
[Tirmidhi 2149]
தொடர்புடைய பிற பதிவு: கியாமத் நாளின் அடையாளங்கள் -1
Blogger Widget