அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

தம்மிடமிருப்பதில் சிறந்த ஆடையை அணிந்து ஜுமுஆவிற்குச் செல்ல வேண்டும்…


தினம் ஒரு ஹதீஸ்-411

نا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، ثنا شُعَيْبٌ، نا اللَّيْثُ، عَنِ ابْنِ عَجْلانَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ وَدِيعَةَ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ ، فَأَحْسَنَ الْغُسْلَ, ثُمَّ لَبِسَ مِنْ صَالِحِ ثِيَابِهِ, ثُمَّ مَسَّ مِنْ دُهْنِ بَيْتِهِ مَا كَتَبَ اللَّهُ لَهُ, أَوْ مِنْ طِيبِهِ, ثُمَّ لَمْ يُفَرِّقْ بَيْنَ اثْنَيْنِ كَفَّرَ اللَّهُ عَنْهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ قَبْلَهَا
ﺻﺤﻴﺢ ﺍﺑﻦ ﺧﺰﻳﻤﺔ 1670

ஜுமுஆ நாளில் ஒருவர் நல்ல முறையில் குளித்து தூய்மையாகி, தம்மிடமிருப்பதில் சிறந்த ஆடையை அணிந்து, தம்மிடமுள்ள எண்ணெயைத் தேய்த்துக் கொள்கிறார். பிறகு புறப்பட்டு (நெரிசலை உருவாக்கும் விதமாக) இருவரை பிரித்துக் கொண்டு வராமல் (பள்ளிக்கு) வந்து தமக்கு விதியாக்கப்பட்டுள்ளதைத் தொழுகிறார் எனில், அவருக்கு அந்த ஜுமுஆவுக்கும் அதற்கு முந்தைய ஜுமுஆவுக்கும் இடையிலேற்பட்ட பாவங்கள் மன்னிக்கப்பட்டே தீருகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: இப்னுகுஸைமா 1670

Narrated Abu Dhar (ra):
The Prophet (sal) said, “Whoever takes a bath on Friday, purifies himself as much as he can, wears the best of his clothes, then uses his (hair) oil, then proceeds (for the Jumuah prayer) and does not separate two persons sitting together (in the mosque), then prays as much as (Allah has) written for him, and his sins in-between the present and the last Friday would be forgiven.
[Ibn Khuzaymah 1670]

ஜுமுஆ சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget