அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

தர்மம் செய்தல்…


தினம் ஒரு ஹதீஸ்-412

‎حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى كُلِّ مُسْلِمٍ صَدَقَةٌ قَالُوا فَإِنْ لَمْ يَجِدْ قَالَ فَيَعْمَلُ بِيَدَيْهِ فَيَنْفَعُ نَفْسَهُ وَيَتَصَدَّقُ قَالُوا فَإِنْ لَمْ يَسْتَطِعْ أَوْ لَمْ يَفْعَلْ قَالَ فَيُعِينُ ذَا الْحَاجَةِ الْمَلْهُوفَ قَالُوا فَإِنْ لَمْ يَفْعَلْ قَالَفَيَأْمُرُ بِالْخَيْرِ أَوْ قَالَ بِالْمَعْرُوفِ قَالَ فَإِنْ لَمْ يَفْعَلْ قَالَ فَيُمْسِكُ عَنِ الشَّرِّ، فَإِنَّهُ لَهُ صَدَقَةٌ
ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 6022

தர்மம் செய்வது எல்லா முஸ்லிமின் மீதும் கடமையாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘(தர்மம் செய்ய ஏதும்) கிடைக்கவில்லையானால்?‘ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “தம் இரண்டு கைகளால் உழைத்துத் தாமும் பயனடைவார்; தர்மம் செய்(து பிறரையும் பயனடையச் செய்)வார்” என்று கூறினார்கள். மக்கள், ‘அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையானால்’ அல்லது ‘அதை அவர் செய்யாவிட்டால்’ (என்ன செய்வது?)‘ என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், “பாதிக்கப்பட்ட தேவையாளிக்கு அவர் உதவட்டும்” என்றார்கள். மக்கள், ‘(இதை இயலாமையாலோ சோம்பலினாலோ) அவர் செய்யவில்லையானால் (என்ன செய்வது?)‘ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “அப்போது அவர் ‘நல்லதை’ அல்லது நற்செயலை’(ச் செய்யும்படி பிறரை) அவர் ஏவட்டும்” என்றார்கள். ‘(இதையும்) அவர் செய்யாவிட்டால்?‘ என்று கேட்டதற்கு, நபி (ஸல்) அவர்கள், “அவர் தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே அவருக்கு தர்மம் ஆகும்” என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூ மூஸா அல்-அஷ்அரீ (ரலி)
நூல்: புகாரி 6022

Narrated Abu Musa Al-Ash`ari (ra):
The Prophet (sal) said, “On every Muslim there is enjoined (a compulsory) Sadaqa (alms).” They (the people) said, “If one has nothing?‘ He said, “He should work with his hands so that he may benefit himself and give in charity.” They said, “If he cannot work or does not work?” He said, “Then he should help the oppressed unhappy person (by word or action or both).” They said, “If he does not do it?” He said, “Then he should enjoin what is good (or said what is reasonable).‘ They said, “If he does not do that” He said, “Then he should refrain from doing evil, for that will be considered for Him as a Sadaqa (charity).
[Bukhari 6022]
தர்மம் சம்பந்தமான எமது தளத்தின் அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget