அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

விதியைப் பற்றி சர்ச்சை செய்யாதீர்கள்…


தினம் ஒரு ஹதீஸ்-278

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ : خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَصْحَابِهِ ، وَهُمْ يَخْتَصِمُونَ فِي الْقَدَرِ ، فَكَأَنَّمَا يُفْقَأُ فِي وَجْهِهِ حَبُّ الرُّمَّانِ مِنِ الْغَضَبِ ، فَقَالَ بِهَذَا أُمِرْتُمْ ، أَوْ لِهَذَا خُلِقْتُمْ تَضْرِبُونَ الْقُرْآنَ بَعْضَهُ بِبَعْضٍ ، بِهَذَا هَلَكَتِ الْأُمَمُ قَبْلَكُمْ
ﺳﻨﻦ ﺍﺑﻦ ﻣﺎﺟﺔ 82

நபித்தோழர்களில் சிலர் விதி தொடர்பாக தர்க்கம் செய்து கொண்டிருந்த போது அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். (அவர்களின் இச்செயலைக் கண்ட) உடனே கோபத்தால், நபி (ஸல்) அவர்களின் முகம் மாதுளை முத்துக்களைப் போன்று சிவந்து விட்டது. தமது தோழர்களிடம், “இவ்வாறு செய்யுமாறு தான் நீங்கள் உத்தரவிடப்பட்டீர்களா? அல்லது இதற்காகத் தான் நீங்கள் படைக்கப்பட்டீர்களா? குர்ஆனில் ஒன்றை மற்றொன்றுடன் மோதவிடுகின்றீர்களே. உங்களுக்கு முன்னால் வாழ்ந்த சமுதாயத்தவர்கள் விதியில் சர்ச்சை செய்த காரணத்தினால் தான் அழிந்து போனார்கள்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: இப்னுமாஜா 82

Narrated Abdullah bin Amr (ra):
The Messenger of Allah (sal) came out to his Companions when they were disputing about the Divine Decree, and it was as if pomegranate seeds had burst on his face (i.e. turned red) because of anger. He said: ‘Have you been commanded to do this, or were you created for this purpose? You are using one part of the Qur’an against another part, and this is what led to the doom of the nations who came before you.‘”
[Ibnmajah 82]
Blogger Widget