அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

இனவெறியின் விபரீதம்…


தினம் ஒரு ஹதீஸ்-5

இனவெறி என்பது முட்டாள்தனம், அத்தகைய மூடத்தனமான இனவெறியின் பக்கம் பிறரை அழைத்த நிலையிலோ, அதை ஆதாரித்த நிலையிலோ இறந்தவர் (முஸ்லிமாக இருப்பினும்) முஸ்லிமல்லாதவர் என்ற நிலையில் இறந்தவர் போன்றவரே ஆவார்.
حَدَّثَنَا هُرَيْمُ بْنُ عَبْدِ الأَعْلَى، حَدَّثَنَا الْمُعْتَمِرُ، قَالَ سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، عَنْ أَبِي، مِجْلَزٍ عَنْ جُنْدَبِ بْنِ عَبْدِ اللَّهِ الْبَجَلِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلممَنْ قُتِلَ تَحْتَ رَايَةٍ عُمِّيَّةٍ يَدْعُو عَصَبِيَّةً أَوْ يَنْصُرُ عَصَبِيَّةً فَقِتْلَةٌ جَاهِلِيَّةٌ
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 3770

மௌடீகத்தின் கொடிக்குக் கீழே இன மாச்சரியத்திற்கு அழைப்பு விடுக்கவோ, இன மாச்சரியத்திற்காக ஒத்துழைக்கவோ செய்து அதற்காகக் கொல்லப்படுபவர் அறியாமைக் கால மரணத்தையே சந்திப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுன்தப் பின் அப்துல்லாஹ் அல்பஜலீ (ரலி)
நூல்: முஸ்லிம் 3770

Narrated Jundub ibn ‘Abdullah al-Bajali (ra):
The Messenger of Allah (sal) said: One who is killed under the banner of a man who is blind (to his just cause), who raises the slogan of family or supports his own tribe, dies the death of one belonging to the days of Jahiliyya.
[Muslim 3770]
Blogger Widget