அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

கடமையான குளிப்பை நிறைவேற்றும் முறை…


தினம் ஒரு ஹதீஸ்-420

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ يَبْدَأُ فَيَغْسِلُ يَدَيْهِ ثُمَّ يُفْرِغُ بِيَمِينِهِ عَلَى شِمَالِهِ فَيَغْسِلُ فَرْجَهُ ثُمَّ ضَرَبَ بِشِمَالِهِ الأَرْضَ فَدَلَكَهَا دَلْكًا شَدِيدًا ثُمَّ يَتَوَضَّأُ وُضُوءَهُ لِلصَّلاَةِ ثُمَّ يَأْخُذُ الْمَاءَ فَيُدْخِلُ أَصَابِعَهُ فِي أُصُولِ الشَّعْرِ حَتَّى إِذَا رَأَى أَنْ قَدِ اسْتَبْرَأَ حَفَنَ عَلَى رَأْسِهِ ثَلاَثَ حَفَنَاتٍ ثُمَّ أَفَاضَ عَلَى سَائِرِ جَسَدِهِ ثُمَّ تَنَحَّى عَنْ مَقَامِهِ ذَلِكَ فَغَسَلَ رِجْلَيْهِ
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 526 / 528

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காகக் குளிக்கும் போது முதலில் தம் கைகளை (மணிக்கட்டுவரை) இரண்டு அல்லது மூன்று தடவை கழுவுவார்கள். பிறகு வலக் கையால் (தண்ணீர் அள்ளி) இடக் கையின் மீது ஊற்றி இடக் கையினால் பிறவி உறுப்பைக் கழுவுவார்கள். பிறகு இடக் கையை பூமியில் வைத்து நன்கு தேய்த்துக் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்காக உளூ செய்வதைப் போன்று உளூ செய்வார்கள். (அதில் கால்களை மட்டும் கழுவாமல் இருப்பார்கள்.) அதன் பின்னர் தண்ணீரை அள்ளி மயிர்க்கால்களுக்கு இடையே விரல்களை நுழை(த்துத் தலையைத் தேய்)ப்பார்கள். தலையின் அடிப்பாகம் முழுவதும் நனைந்துவிட்டதாகத் தெரிந்ததும் இரு கைகளிலும் மூன்று தடவை தண்ணீர் அள்ளி தலையில் ஊற்றுவார்கள். பிறகு மேனி முழுவதிலும் (நனையும் படி உடலில்) தண்ணீர் ஊற்றுவார்கள். பின்னர் அவ்விடத்திலிருந்து சற்று நகர்ந்து (நின்று, கடைசியாகத்) தம் கால்களைக் கழுவுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) / மைமூனா (ரலி)
நூல்: முஸ்லிம் 526 / 528

‘A’isha (ra) / Maimuna (ra) reported:
When Allah’s Messenger (sal) bathed because of sexual intercourse, he first washed his hands twice or thrice, he then poured water with his right hand on his left hand and washed his private parts. He then struck his hand against the earth and rubbed it with force. He then performed ablution as is done for prayer’. He then took some water and put his fingers and moved them through the roots of his hair. And when he found that these had been properly mois- tened, then poured three handfuls on his head and then poured water over his body and subsequently washed his feet.
[Muslim 526 / 528]
Blogger Widget