தினம் ஒரு ஹதீஸ்-373
ஜமாஅத் தொழுகை நடந்து கொண்டிருக்கையில் சிலர் அத்தொழுகையில் சேர வேண்டுமென்பதற்காக ஓடி வருவார்கள், இது பெரும்பாலும் இமாம் ருகூவில் இருக்கும் நேரங்களில் நிகழும், ஆனால் இவ்வாறு செய்யக் கூடாது, நிதானமாக நடந்து வந்தே சேர்ந்து, பின் விடுபட்டதை நிறைவேற்ற வேண்டும்.
وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، – وَاللَّفْظُ لَهُ -أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ فَلاَ تَأْتُوهَا تَسْعَوْنَ وَأْتُوهَا تَمْشُونَ وَعَلَيْكُمُ السَّكِينَةُ فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 1053
“தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் தொழுகைக்கு ஓடிச்செல்லாதீர்கள்; நடந்தே செல்லுங்கள்; நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தை (இமாமுடன்) தொழுங்கள்; தவறிப்போனதை (பின்னர் எழுந்து) நிறைவு செய்து கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1053
Abu Huraira (ra) reported:
I heard the Messenger of Allah (sal) saying:When the Iqama has been pronounced for prayer, do not go running to it, but go walking in tranquillity and pray what you are in time for, and complete what you have missed.
[Muslim 1053]
தொழுகை சம்பந்தமாக எமது தளத்தின் அனைத்துப் பதிவுகளையும் காண,இங்கே கிளிக் செய்யுங்கள்.