தினம் ஒரு ஹதீஸ்-260
தொழுகையில் இமாமானவர் பின்பற்றப்படுவதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளார், தொழுகையில் செய்யும் எந்தவொரு செயலையும் அவர் செய்தப் பின், தான் அவரைப் பின்பற்றி நாம் செய்ய வேண்டும், அவரை முந்திக் கொண்டு தொழுவதென்பது மறுமையில் தண்டணைக்குரிய செயலாகும்.
حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ أَمَا يَخْشَى أَحَدُكُمْ ـ أَوْ لاَ يَخْشَى أَحَدُكُمْ ـ إِذَا رَفَعَ رَأْسَهُ قَبْلَ الإِمَامِ أَنْ يَجْعَلَ اللَّهُ رَأْسَهُ رَأْسَ حِمَارٍ أَوْ يَجْعَلَ اللَّهُ صُورَتَهُ صُورَةَ حِمَارٍ
ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 691
“உங்களில் ஒருவர் (தொழுகையில்) இமாமை முந்திக்கொண்டு தம் தலையை உயர்த்துவதால் (மறுமையில்) அவருடைய தலையைக் கழுதையுடைய தலையாக அல்லாஹ் ஆக்கிவிடுவதை அல்லது அவருடைய உருவத்தைக் கழுதையுடைய உருவமாக அல்லாஹ் ஆக்கி விடுவதை அஞ்ச வேண்டாமா?” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 691
Narrated Abu Huraira (ra):
The Prophet (sal) said, “Isn’t he who raises his head before the Imam afraid that Allah may transform his head into that of a donkey or his figure (face) into that of a donkey?“
[Bukhari 691]