தினம் ஒரு ஹதீஸ்-258
“படைப்பினங்களிலேயே மிகவும் தீயவர்கள் மீதே யுகமுடிவு நாள் சம்பவிக்கும். அவர்கள் அறியாமைக் கால மக்களைவிட தீயவர்களாக இருப்பர். அவர்கள் அல்லாஹ்விடம் எதை வேண்டினாலும் இறைவன் அதை நிராகரித்துவிடுவான்” என்பது நபி (ஸல்) அவர்களின் கூற்று. அத்தீயவர்களில் ஒரு சாரார் இறந்தவர்களை புதைத்திருக்கும் சமாதியை வணங்கக்கூடியவர்கள்:
حَدَّثَنَا مُعَاوِيَةُ، حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَقُولُ إِنَّ مِنْ شِرَارِ النَّاسِ مَنْ تُدْرِكُهُ السَّاعَةُ وَهُمْ أَحْيَاءٌ ، وَمَنْ يَتَّخِذُ الْقُبُورَ مَسَاجِدَ
ﻣﺴﻨﺪ ﺃﺣﻤﺪ 3713
“மக்களிலேயே மிகவும் தீயவர்களில் ஒரு பிரிவினர் அடக்கத்தலங்களை (கப்ர்கள்) வணக்கத்தலங்களாக ஏற்படுத்திக் கொண்டவர்கள் ஆவார்கள். (அல்லாஹ் அனுப்பும் கஸ்தூரி போன்ற மணமுடைய தூயக்காற்று மூலம் முஸ்லிம்கள் அனைவரும் இறந்து, கப்ர்களை வணங்கும்) இவர்கள் எஞ்சியிருக்கும் நிலையில் தான் உலக முடிவு நாள் ஏற்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: அஹ்மத் 3713
Narrated ‘Abdullah bin Mas’ood (ra):
I heard the Messenger of Allah (sal) say, “Among the most evil of mankind will be those on whom the Hour comes when they are still alive, and those who take graves as places of worship.“
[Ahmad 3713]
தொடர்புடைய பிற பதிவு:குர்ஆன் 3:169 வசனமும், சமாதி வழிபாடும்…