அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

இணைகற்பிப்போருக்கு நேர்வழி கிடைக்க வேண்டி பிரார்திக்கலாம்…


தினம் ஒரு ஹதீஸ்-264

இணை கற்பிப்போர்கள் எவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்தாலும் அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமென்றோ, அவர்களுக்கு சொர்க்கம் கிடைக்க வேண்டுமென்றோ எவரும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கக்கூடாது. மாறாக அவர்களுக்கு நேர்வழி கிடைக்க வேண்டி பிரார்த்திக்கலாம்…
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ، قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه قَدِمَ طُفَيْلُ بْنُ عَمْرٍو الدَّوْسِيُّ وَأَصْحَابُهُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ، إِنَّ دَوْسًا عَصَتْ وَأَبَتْ، فَادْعُ اللَّهَ عَلَيْهَافَقِيلَ هَلَكَتْ دَوْسٌ قَالَ اللَّهُمَّ اهْدِ دَوْسًا وَائْتِ بِهِمْ
ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 2937

துஃபைல் பின் அம்ர் அத்தவ்ஸீ (ரலி) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (எங்கள்) “தவ்ஸ்’ குலத்தார் மாறு செய்து (இஸ்லாத்தை ஏற்க மறுத்து) விட்டார்கள். அவர்களுக்குத் தீங்கு நேரப் பிரார்த்தியுங்கள்” என்று கேட்டுக் கொண்டனர். மேலும் அவர்கள், “தவ்ஸ் குலத்தார் அழியட்டும்” என்றும் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இறைவா! தவ்ஸ் குலத்தாரை நேர்வழியில் செலுத்துவாயாக! அவர்களை (இஸ்லாத்திற்குக்) கொண்டு வருவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2937

Narrated Abu Huraira (ra):
Tufail bin `Amr Ad-Dausi (ra) and his companions came to the Prophet (sal) and said, “O Allah’s Messenger! The people of the tribe of Daus disobeyed and refused to follow you; so invoke Allah against them.” The people said, “The tribe of Daus is ruined.” The Prophet (sal) said, “O Allah! Give guidance to the people of Daus, and let them embrace Islam.
[Bukhari 2937]
Blogger Widget